Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Tuesday, September 23, 2014

அவ்வப்போது 11 : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு!

பொதுவாகவே ஷாப்பிங் மோகம் குறைந்து போய்விட்டதால் மால்கள் என் கவனத்தை ஈர்ப்பதில்லை.

வாங்கியே தீரவேண்டும் என்ற பொருள்களுக்காக, தேர்வுக்குத் தயாராவதைப் போல் வீட்டில் ஹோம்வொர்க் செய்து விட்டு தேவைகளின் பட்டியலையும், நுழைய வேண்டிய கடைகளின் பெயர்களையும் மனப்பாடம் செய்து விட்டுப் போனால்கூட, திட மனத்தையும் நொடி நேரத்தில் திசை திருப்பி விடுகிறார்கள் மார்க்கெட்டிங் மேதைகள். அவசியமே

இல்லாத விஷயங்கள் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்த்து, சிந்தைக்குள் போதையைத் தூவி, வீட்டிற்கு வந்து சேர்ந்தால் பட்டியலில் இல்லாத பொருள்கள் பாதியளவாவது பைகளில். போதை தெளியும்போது மனத்தில் ஆயாசம்.

இதைவிட, “கூட மாட ஒத்தாசைக்கு வந்து வாங்கிக் கொடுத்தால் என்ன? வீட்டில உட்கார்ந்து அதைவிட பெருசா என்னத்தச் சாதிக்கப் போறீங்க?” என்று வந்து விழும் செல்ல வசவுகளை ஏற்றுக் கொள்வது தேவலையாக இருக்கிறது. சில சமயம் மனம் குறுக்குக் கேள்வி கேட்டு நேர்மையைச் சோதிக்கும். “யூ ஹேட் ஷாப்பிங்? உனக்கு வயசாயிடுச்சோ?”

Friday, February 14, 2014

ஐ லவ் சென்னை எப்பவும்

சென்னை வந்து இந்த மாதத்தோடு ஒன்பது வருடங்கள் ஆகின்றன. இந்த வருடங்களில் சென்னையின் வரலாற்றில் எல்லாம் இடம்பிடிக்கவில்லை தான். ஆனால் வருங்காலத்தில் நான் என் வரலாற்றை எழுதினால் பெரும் சாட்சியாய் இருக்கப் போவது சென்னை தான்..

சென்னை மீது எப்போதும் பெருங்காதல் உண்டு.. பெருங்காதலின் உபவிளைவாய் அவ்வப்போது கோபமும், சலிப்பும் கூட ஏற்படுவது உண்டு தான்... எந்த ஊருக்குக் கிளம்பினாலும் திரும்பி வர விரும்புகிற இடமாய் சென்னை தான் இருக்கிறது. சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும் சரி, பெண்களும் சரி சொந்த ஊர்ப் பெருமை பேசுவதோ, ஊர் திரும்புதலை பற்றி யோசிப்பதோ குறைவுதான். ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை யாரும் விரும்புவதில்லை தானே?

பயங்களும், குழப்பங்களும் நிறைந்த என் பால்ய காலத்தை எப்போதுமே நான் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவதில்லை.. நினைவு தெரிந்த நாளில் இருந்தே அந்த ஊரின் மூச்சுத் திணறலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே கனவாய் இருந்தது. சென்னைக்கு முதலில் வந்தபோது வேலையே இருக்கவில்லை.. வேலை கிடைத்து விட்டதாய் வீட்டில் பொய் சொல்லி, தி.நகர் தராசு அலுவலக வாசலில் அப்பாவை நிற்கவைத்து, அதெல்லாம் பெரிய டிராமா...:)