Showing posts with label அறியாமை. Show all posts
Showing posts with label அறியாமை. Show all posts

Sunday, November 17, 2013

"அவனுக்கு நிகராக எவரும் இல்லை."

அறியாமையின் நிலை மோசமான நிலை
இறைவனை அறியும் நிலை உயர்வான நிலை
இறைவனின் ஒளி ஆன்மாவின் அறிதல் நிலை
ஆன்மாவின் ஒளி வழி ஞானத்தை பெறுதல் நிலை

இறைவனின் அருள் இருளைப் போக்கி ஒளியை தருகிறது
இறைவனை அறிதல் ஆன்மீக ஞானம் பெற வைக்கிறது
ஆன்மீக ஞானம் அறியாமையும் மூடநம்பிக்கையும் .போக்குகின்றது
பயத்தை அகற்றி நேர்வழியில் நடை போட வைக்கின்றது

மறைந்து செயல்படும் பொய்யான வாழ்க்கையை போக்குகின்றது
இடையூறுகளை நினைத்து செயலில் தொய்வு விழ வைக்காமல் தொடர்கின்றது
நேர்மையான செயலில் ஈடுபடும் உறுதியான கொள்கையை உருவாக்குகின்றது
ஆன்மாவின் கோட்டை உறுதிப்பாட்டோடு நிலைத்து நிற்கின்றது

Wednesday, October 9, 2013

யார் யார் எத்தனை சதவிகிதம்?

ஒரு மார்க்கத்தில் (மதத்தில்)

1. மார்க்கத்தின் அடிப்படையோடு இயைந்து எவருக்கும் தீங்கின்றி அமைதியாக வாழ்பவர்கள்.

2. மார்க்கத்தின் பெயரால் அறியாமையில் உள்ளவர்களை பயன்படுத்தி புகழ், பொருள், அதிகாரம் பெற்று ஊரை நாட்டை உலகை நாசம் செய்பவர்கள்

3. அறிந்துகொள்ளும் எண்ணமே இல்லாமல் அறியாமையில் இருக்கும் மக்கள். பயம் காரணமாக எதையும் நம்புவார்கள்.

4. மதத்தைக் கண்மூடித்தனமாகக் கண்டு தவறான அழிவுத் திசையில் வெறிபிடித்து அலையும் அடிப்படைவாதிகள்

5. எனக்கு மார்க்கம் பிறப்பால் வந்தது. மற்றபடி எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று நாட்டின் சட்ட ஒழுங்கினைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.

இவர்களுள் யார் யார் எத்தனை சதவிகிதம் என்று எவராவது கூறமுடியுமா?

by  அன்புடன்புகாரி
நன்றி http://anbudanbuhari.blogspot.in