Saturday, November 7, 2020

எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே

 



எள்ளு வய பூக்கலையே

ஏறெடுத்தும் பாக்கலையே

ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா

அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல

கொட்டடியில் கோழி குஞ்சு

அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா

ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

காத்தோட உன் வாசம்

காடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா

சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா

சாவையும் கூறு போட்டு கொல்லய்யா

கல்லாக நின்னாயோ

கால் நோக நின்னாயோ

கண்ணே நீ திரும்பி வரணும்

வீட்டுக்கு

மல்லாந்து போனாலும்

மண்ணோடு சாஞ்சாலும்

அய்யா நீ பெருமை சாதி

சனத்துக்கு

தலைச்சம் புள்ளை இல்லாம

சரிஞ்சது எத்தன ஆட்சி

நீயே எங்க ராசா வா வா களத்துக்கு

தாயோட பாரம் மாசம் பத்தய்யா

தாங்காம நீயும் போனா தப்பய்யா

எள்ளு வய பூக்கலையே

ஏறெடுத்தும் பாக்கலையே

ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா

அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

வாள் ஏந்தி வந்தாலும்

வாழாம செத்தாலும்

கம்பீரம் கொறைஞ்சிடாத

நெருப்பு நீ

அய்யோன்னு போனாலும்

ஆகாசம் போனாலும்

தண்ணீர கொளத்தில் சேர்க்கும்

வரப்பு நீ

உழைக்க எண்ணுற ஆள

உதைச்சி தள்ளுற ஊர

கைய கால வெட்டி வீசும்

கருப்பு நீ

காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ

காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ

எள்ளு வய பூக்கலையே

ஏறெடுத்தும் பாக்கலையே

ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா

அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல

கொட்டடியில் கோழி குஞ்சு

அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா

ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

காத்தோட உன் வாசம்

காடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா

சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா

சாவையும் கூறு போட்டு கொல்லய்யா


பாடல் - எள்ளு வய பூக்கலையே

திரைப்படம் - அசுரன்

பாடியவர்கள் - சைந்தவி

பாடலாசிரியர் - யுகபாரதி

இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்

 http://geekylyrics.blogspot.com/

No comments: