Monday, April 15, 2019

இரக்கமுள்ளவனே ...


இறைவா ...
இரவுகளின் ஆட்சியாளனே !
விண்மீன்களின் எஜமானனே !

விண்ணுக்குள் இருந்தும்
விடியலை
எங்கள்
விழிகளுக்குள் மறைத்து
வைப்பவனே !

விடியும்வரை
விழித் திரைகளில்
நித்திரையை
இமைத்திரை கொண்டு
போர்த்துபவனே !


இரக்கத்தால்
எங்களை
மீண்டும்
உயிர்பிப்பவனே !

இறைவா ..
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன் !

உனக்கே எல்லாப் புகழும்
அல்ஹம்துலில்லாஹ் !
- அபு ஹாஷிமா
Abu Haashima

No comments: