20.07.14
அன்று விஜய் டிவி நீயா நானாவில் நான் பேசியதன் சுருக்கம்
இதுதான்:
இரண்டு தரப்பினரையும் நான் கேட்ட இன்னொரு கேள்வி:
”ஒரு மாணவர் கிளிப்பிள்ளை மாதிரி புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதினால் ஒத்துக்கொள்வீர்கள்.
ஆனால் அவரே சொந்தமாக சிந்தித்து எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா? நான் ஒரு உதாரணம் தருகிறேன். என் நாகூர் பள்ளிக்கூட அனுபவத்திலிருந்து.
புவியியலில் ஒரு கேள்வி கேட்டார்கள். ”மண் புழு எங்கே வசிக்கும்? மண் புழுவின் உணவு யாது?” என்று. அதற்கு ஒரு மாணவர் சரியான விடையை தன்னுடைய சொந்த பாணியில் எழுதியிருந்தார்.
அதற்காக அவருக்கு மார்க் தரப்படவில்லை. அடிதான் விழுந்தது. அவர் என்ன எழுதினார் தெரியுமா?

