Showing posts with label அரசுப் பள்ளி. Show all posts
Showing posts with label அரசுப் பள்ளி. Show all posts

Monday, July 21, 2014

விஜய் டிவி நீயா நானாவில் நாகூர் ரூமி பேசியதன் சுருக்கம்



20.07.14 அன்று விஜய் டிவி நீயா நானாவில் நான் பேசியதன் சுருக்கம் இதுதான்: 
இரண்டு தரப்பினரையும் நான் கேட்ட இன்னொரு கேள்வி:
 
ஒரு மாணவர் கிளிப்பிள்ளை மாதிரி புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதினால் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் அவரே சொந்தமாக சிந்தித்து எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா? நான் ஒரு உதாரணம் தருகிறேன். என் நாகூர் பள்ளிக்கூட அனுபவத்திலிருந்து. புவியியலில் ஒரு கேள்வி கேட்டார்கள். மண் புழு எங்கே வசிக்கும்? மண் புழுவின் உணவு யாது? என்று. அதற்கு ஒரு மாணவர் சரியான விடையை தன்னுடைய சொந்த பாணியில் எழுதியிருந்தார். அதற்காக அவருக்கு மார்க் தரப்படவில்லை. அடிதான் விழுந்தது. அவர் என்ன எழுதினார் தெரியுமா?

Sunday, April 20, 2014

வேடிக்கை பார்க்கவா அரசு?

எல்.கே.ஜி வகுப்பில் குழந்தையை சேர்க்க இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடை கேட்கின்றன சில பள்ளிகள். என்னதான் வசதி இருந்தாலும், இந்த அளவுக்கு யார் கொடுப்பார்கள் என்று நினைக்கிறோம். ’எத்தனை லட்சம் என்று நாங்கள் கேட்கவே மாட்டோம். இதோ பிடியுங்கள், பிளாங்க் செக். நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள்’ என்று அம்மா அப்பாக்கள் சொல்கிறார்களாம்.

பணக்காரத் திமிர் என்று நீங்கள் சுலபமாக சொல்லி விடுவீர்கள். உற்றுப் பார்த்தால் தெரியும், அவர்கள் யாரும் பெரும் செல்வந்தர்கள் அல்ல என்பது. பணம் புரட்டக் கூடிய நிலையில் இருப்பவர்கள். அநியாய வட்டிக்கு கடன் வாங்கியோ, கிரெடிட் கார்டை தேய்த்தோ, ஈசியாரில் அல்லது ஓயெம்மாரில் வாங்கிப் போட்ட ஃபிளாட்டை அடமானம் வைத்தோ தேவையான பணத்தை தயார் செய்யக் கூடியவர்கள். மிடில் கிளாஸ் மாதவ மாதவிகள்.