Showing posts with label மாணவர். Show all posts
Showing posts with label மாணவர். Show all posts

Monday, July 21, 2014

விஜய் டிவி நீயா நானாவில் நாகூர் ரூமி பேசியதன் சுருக்கம்



20.07.14 அன்று விஜய் டிவி நீயா நானாவில் நான் பேசியதன் சுருக்கம் இதுதான்: 
இரண்டு தரப்பினரையும் நான் கேட்ட இன்னொரு கேள்வி:
 
ஒரு மாணவர் கிளிப்பிள்ளை மாதிரி புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதினால் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் அவரே சொந்தமாக சிந்தித்து எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா? நான் ஒரு உதாரணம் தருகிறேன். என் நாகூர் பள்ளிக்கூட அனுபவத்திலிருந்து. புவியியலில் ஒரு கேள்வி கேட்டார்கள். மண் புழு எங்கே வசிக்கும்? மண் புழுவின் உணவு யாது? என்று. அதற்கு ஒரு மாணவர் சரியான விடையை தன்னுடைய சொந்த பாணியில் எழுதியிருந்தார். அதற்காக அவருக்கு மார்க் தரப்படவில்லை. அடிதான் விழுந்தது. அவர் என்ன எழுதினார் தெரியுமா?

Saturday, February 11, 2012

மாணவர்களுக்குக் கடும் தண்டனை கூடாது!

மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் விதத்திலான கடும் தண்டனைகள் கூடாது" என மெட்ரிகுலேசன் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சென்னை பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரியை 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் குத்திக் கொன்றான். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கியது.

இந்நிலையில், மெட்ரிகுலேசன் இயக்ககம் மாணவர்கள்-ஆசிரியர்கள் இடையே இணக்கம் அதிகரிக்க சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலை சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  எனவே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பிரச்சனை வராதவாறு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் வகையில் கடுமையான தண்டனை கூடாது."

என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், "இந்தக் கல்வி முறை மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது" என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Source : http://www.inneram.com