Tuesday, July 10, 2018

சம்சாரி ....!

சம்சாரி ....!

எண்ணங்களின் ஆர்ப்பரிப்பு
மனதில் ஒன்றவிடாமல் சிந்தனையை அலைக்கழித்தன

வார்த்தைகளின் அழுத்தங்கள்
செவிப்பறையை கிழித்து மதியை எட்டவிடவில்லை

நிகழ்ந்தவைகளின் கோர்வைகள்  நினைவில்வந்து எதிகாலத்தை  நிர்மூலமாக்க எத்தனிக்கின்றன


நிம்மதிவேண்டி நிகழ்த்திய கருதிக்கூட்டல்கள் கழிசடைகளால் சல்லடைபோல் சிதறடிக்கப்பட்டது

அமுதென்றெண்ணி நீர்த்தசுண்ணாம்பை அருந்திய அவஸ்தையில் அல்லல்பட்டு உழலுகிறான்

அத்தனையும் எதிர்கொண்டு
ஆண்டவன்மேல் பாரம்வைத்து
ஆவனவெல்லாம் செய்கிறான்

அனைத்து துன்பங்களும்
மீண்டுவிடாது தூராகிவிடவே
பிரார்த்தனையில் மூழ்குகிறான்

சோகத்தை சுமந்தபடி  வாழ்க்கைப்படிகளில் ஏறுகிறான்  சுகத்தை நாடும் சம்சாரி.
Abdul Kader Sangam 

from: Abdul Kader Sangam <sangamsak@gmail.com>

No comments: