Friday, February 18, 2022

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

 

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

முகமும் பாதமும் கணுக்கை தவிர்த்து

முழுமையாக மூடப்பட்டிருந்தும்

வெயிலிலும் பனிமழையிலும்

அவளது  நடையில் தொய்வில்லை

அவளைப்  பார்த்து  ஒடுக்கப்பட்டவள்  என்று சொல்வார்கள்

அவளது  உடையணிந்த விதத்தைப் பார்த்து

மற்றவரது மட்டமான  கருத்துகளால்

அவள் கவலைப்படவில்லை

அவள் தன் இறைவனால்  ஆசீர்வதிக்கப்பட்டவள்

அவள்  இறைவனது  ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்படிவதால்

அவள் மனம் நிறைவாய் உள்ளது

கலகக்காரர்களின்  பெருத்த  முயற்சியும்

அவள் மனதில் எந்த அச்சமுன் எழவில்லை

அவளது நடையில் இயல்பாக உள்ள வேகம்

அவளை  ஓட்டத்துடன் செல்ல இடம் தரவில்லை

அவள் கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படுத்தப்பட்டாலும்

அவள் தன்  அடையாளத்தை சமரசம் செய்துக் கொள்ள விரும்பவில்லை

அவள்  யாருக்கும்  அடிமையாக  இல்லை

அவள்  ஏங்குவது அல்லாஹ்வின் அருளை .மட்டுமே

இறைவனது வார்த்தையை அவள்  இதயத்தில் சுமக்கிறாள்

" பெண்களே, உங்கள் மேலங்கியை மூடுங்கள் .

எனவே அறியாத மக்களால் நீங்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டீர்கள்."

அவளை எவரும்  இப்படி உடை அணியச் சொல்லவில்லை.

அவள்  கீழ்ப்படிவது இறைவனது  சட்டத்திற்கு .மட்டுமே

அவள் ஒடுக்கப்பட்டவள் அல்ல 

அவளுக்கு  கிடைத்திருப்பது முழுமையான விடுதலை தான் .

அது அவளுக்கு  பல ஆண்டுகளுக்கு முன்பே  வழங்கப்பட்டது,

வளம்பெறும் உரிமையும் , வளறும்  உரிமையும் .

மலைகளையும் கடலையும் கடந்தாலும்

எந்த நிலையிலும் மனதில் மாற்றமில்லை

நேர்மைக்கும் உண்மைக்கும் இறைவனின் வாக்குக்கும்

அவளது மனம் உறுதியுடன் இருக்கும்

No comments: