Monday, March 31, 2014

ஒவ்வொரு மகத்தான வெற்றியாளருக்குப் பின்னாலும் இம்மாதிரி உணர்வுப்பூர்வமான நிஜக்கதை கட்டாயம் இருக்கிறது.

2006 டிசம்பர். விராத் கோஹ்லி டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முந்தைய நாள் ஆட்டத்தின் கடைசியில் நைட் பேட்ஸ்மேனாக களமிறங்கியிருந்தார். ஹோட்டல் அறைக்கு அதிகாலை மூன்று மணிக்கு போன் வருகிறது. படுத்த படுக்கையாய் இருந்த அப்பா பிரேம் கோஹ்லி மரணம்.

மறுநாள் களத்தில் மட்டையை பிடிப்பதா அல்லது அப்பாவின் இறுதிச்சடங்குகளுக்காக ஊருக்குப் போவதா என்று குழப்பம். ஆஸ்திரேலியாவில் இருந்த தன்னுடைய பயிற்சியாளரை தொடர்பு கொள்கிறார்.

வாசனைகள் அனுபவங்கள் உணர்வுகள்.


-நிஷா மன்சூர்

சில வாசனைகள் நம் ஆழ்மனதுக்குள் பதிந்து அந்தநேர அனுபவங்களுடன் ஐக்கியமாகி விடுகின்றன.
உதாரணமாக எனக்கு கிட்னி ஸ்டோன் வலி மிகைத்துத் துடித்த நாளில்
சாப்பிட்ட கொத்தவரங்காய் கூட்டு, அதற்குப்பிறகு வலியைத்தான்
நினைவூட்டுகிறது,இப்போதெல்லாம் கொத்தவரங்காயைப் பார்த்தாலே அடிவயிற்றில் வலிப்பதுபோன்ற ஒரு உணர்வு.

அதேபோல
குளிக்கும்போது காதுக்குள்ளே நீர் புகுந்துவிட்டால்
சின்ன வயதில் கிணற்று நீச்சல் பழகும்போது ஏற்பட்ட உணர்வுகள்
மீண்டும் தோன்றி மறையும்.

வாழ்க்கைத்துணைவி முடிவாகி உறுதிப்படுத்தப்பட்டபோது
தூத்துக்குக்குடியிலிருந்து திருநெல்வேலிக்குள் நுழைந்துகொண்டிருந்தேன். அப்போது காற்றில் மிதந்த மல்லிகை வாசனையோடு அந்த தகவல் மனதில் பதிவாகி உள்ளது,
இப்போது மல்லிகை மணக்கும்போது அந்த நினைவும் மலர்வதைத்
தவிர்க்க முடியவில்லை.

Saturday, March 29, 2014

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யாசர் அரஃபாத்

யாசர் அரஃபாத் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
முகநூலில் (ஃ பேஸ்புக்கில்) யாசர் அரஃபாத் அவர்களின் பக்கம்
  என் பக்கம்
 Yasar Arafat
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் யாசர் அரஃபாத் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

Thursday, March 27, 2014

மருத்துவ குறிப்புகளைத் தங்கிவந்த தமிழர் பழமொழிகள்

By பாலமுருகன் - சென்னை,

தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொழிகளால், முந்தைய தமிழ் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளும், மற்றும் உணவு மற்றும்  மருந்துப் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், அதனால் குணமடையக்கூடிய நோய்கள் பற்றிய விபரங்களும் காணக்கிடைக்கின்றன. இத்தகைய மருத்துவப் பழமொழிகள் பெரும்பாலும், மக்களால் சாதாரணமாகப் பேசப்படுவதில்லை. நோய் உண்டான போதும், கேலியாகப் பேசும் போதும் மட்டுமே வெளிவருகின்றன. மக்களின் அனுபவங்களே பழமொழிகள். அரிய மருத்துவச் செய்திகள்

இந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் வேற்று மனிதர்கள் அல்ல,

ரொம்ப காலமெல்லாம் இல்லை... கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இந்துக்கள் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் வேற்று மனிதர்கள் அல்ல, தங்கள் சொந்த ரத்தத்தில் இருந்து மதம் மாறிச் சென்றவர்கள் என்ற உணர்வும், உண்மையும் அறிந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் இன்றைய புதிய தலைமுறை இங்கிருக்கும் இஸ்லாமியர்களை எங்கிருந்தோ வந்தவர்களாக பார்க்கும் புதிய போக்கு உருவாகியிருக்கிறது. இதற்கு இன்றைய தலைமுறை இந்துக்கள்தான் காரணமா என்று கேட்டால் நிச்சயமா இல்லை... சர்வ நிச்சயமாக சத்தியமாக இஸ்லாமியர்கள் சிலரின் நடவடிக்கைகள்தான் காரணம்!

Wednesday, March 26, 2014

பயமோ பயம் !




பயமே மனிதனின் ஆதி உணர்வு,
எல்லா நவீன முன்னேற்றங்களுக்கும் பயமே தூண்டுகோல்..!!


பசியிலிருந்து விடுதலை பெற்றாலும்
பயத்திலிருந்து விடுதலை பெறமுடியவில்லை..!!


பாசம் பயத்தாலும் வரும்,
பயம் பாசத்தாலும் வரும்...!!

மரணருசி

 “வீட்டில் நான் இல்லாதபோது, நான் இருக்கிறேனா என்று யாராவது கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வார்கள். இதுபோல நாம் ஏராளமான இடங்களில் இருக்கிறபோதே ‘இல்லை’ ஆகிக்கொண்டிருக்கிறோம். இந்த இன்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படாத நாம், என்றோ ஒருநாள் நிரந்தரமாக உலகில் ‘இல்லை’ எனப்படும் மரணம் குறித்துதான் எப்பவும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம்”

‘கதைகள் பேசுவோம்’ இலக்கிய முகாமில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தபோதே, அங்கு வந்திருந்த சில பத்திரிகையாளர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துகொண்டிருந்தது. சகோதரர்களான இரு மூத்த பத்திரிகையாளர்களின் தாயார் காலமாகி விட்டார். உடனடியாக செங்கல்பட்டிலிருந்து கிளம்பிவந்து, இறுதிமரியாதையில் கலந்துகொள்ள சாத்தியமில்லை.

மறுநாள் அண்ணன் சிவராமனோடு துக்கம் விசாரிக்க சென்றிருந்தேன். மொட்டை அடித்திருந்தவர் மெதுவாக பேச ஆரம்பித்தார். “நமக்கு இந்த நம்பிக்கையெல்லாம் இல்லைன்னா கூட, அம்மாவுக்கு இதில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. அதனாலே அவங்க ஆசைப்பட்டமாதிரியே அனுப்பி வெச்சிட்டோம்”

மரணத்துக்கு முன்பாக சில காலம் அவரது தாயார் அனுபவித்த உடல் உபாதைகள், அதன் விளைவாக அவர் மற்றவர்களை சிறுசிறு தேவைகளுக்காகவும் அணுகவேண்டியதினால் ஏற்பட்ட சுயமரியாதை தொடர்பான உளவியல் சிக்கல், மருத்துவ சிகிச்சைகள் என்று பேசிக்கொண்டே இருந்தார்.