முதல் முறை முதல் முறை
உன்னைக் கண்டேன்
இதயம் சற்றே நின்றதடா
மறுமுறை உன்னைக்
காணும் வரை
துடிக்க மாட்டேன் என்றதடா
கனவில் பூக்கும்
எந்தன் கண்கள்
உந்தன் பின்னால் சுற்றுதடா
உன்னை மட்டும்
தொட்டுச் செல்ல
எந்தன் மூச்சும் செல்லுதடா
ஃ
Thursday, August 7, 2014
Wednesday, August 6, 2014
கதியற்றோர் வாழ்வு ?
சொந்த மண்ணில் தஞ்சமாகி
சோகமதைச் சொந்தமாக்கி
மதியிழந்து நிற்கதியாய்
மாறியதோ உந்தன் வாழ்வு
நெஞ்சு பதைக்கும் நீங்கா நிகழ்வு
எஞ்சியிருக்கும் நிழலாய்த் தொடர
பந்தங்கள் பட்டினியால்
பரவிக்கிடக்குது அகதிகளாய்
கெதியற்றுப்போயினரே
கதியற்ற வாழ்க்கையாக
மதியிழந்து நிற்கதியாய்
மாறியதோ உந்தன் வாழ்வு
நெஞ்சு பதைக்கும் நீங்கா நிகழ்வு
எஞ்சியிருக்கும் நிழலாய்த் தொடர
பந்தங்கள் பட்டினியால்
பரவிக்கிடக்குது அகதிகளாய்
கெதியற்றுப்போயினரே
கதியற்ற வாழ்க்கையாக
Tuesday, August 5, 2014
தாய் மொழிகளில் ஹிந்தி வாசனை வீசும்!
தாய் மொழிக் கல்வி ,இரு மொழிக் கல்வி, மும்மொழிக் கல்வி பாடத்திட்டங்கள் எதைப் பற்றியும் இங்கு இருந்து பேசுவதால் ஒரு பயனும் கிடைக்காது
ஹிந்தி பேசும் மக்களால் முழு ஆதரவோடு ஆட்சி அமைத்த பி.ஜே.பி. அரசு ஹிந்தி பேசும் மக்கள் சொல்வதையே கேட்கும்
நாம் விரும்புவதை டெல்லியில் ,அதுவும் பாராளுமன்றம் முன்பு, மக்களை சேர்த்து வேண்டியதை கேட்க வேண்டும்
நீர்ப் பறவையின் நீள் அழைப்பினுள்
ஓர்
அழகெழில் நீர்ப்பறவை
என்னைத்
தன் காந்தக் காதலோடு
கவர்ந்திழுத்தே அழைத்தது
அதன் கவர்ச்சியில்
தகர்ந்து
வெணிலா பனிக்குழைவின்
நட்டநடுவினில்
விரும்பியே தவறி விழும்
செந்திராட்சைக் கனியாக
சரக்கென விழுந்தேன்
அதன்
ராட்சசச் சிறகினைப்
பித்து ரசிகனாய்ப்
பற்றியே ஏறிக்கொண்டேன்
Friday, August 1, 2014
GAZAAAAAA..! காஸா..!
இந்தியனாய் வெள்ளையனிடம்
அடிமைப்பட்டோம் சண்டையிட்டோம்
தமிழனாய் சிங்களனிடம்
ஒடுக்கப்பட்டோம் போராடினோம்
இஸ்லாமியானாய் யூதனிடம்
நசுக்கப்படுகிறோம் அழுகின்றோம்
உங்களிடமிருந்து பாதுகாக்க எங்களிடம் கிடைத்ததோ தெருவில் கிடக்கும் கற்கள்
ஏவுகனையால் எங்களை தாக்குகிறாய்
இயந்திரங்களைக் கொண்டு எங்களை நசுக்குகின்றாய்
உலகத்தை ஆட்டி வைக்கும் போலிஸ் அமெரிக்கா உனக்கு துணை
எங்களிடம் கிடைத்ததோ
உங்களிடமிருந்து பாதுகாக்க
தெருவில் கிடக்கும் கற்கள்
கற்களே எங்களுக்கு இந்நாள் வரை
எங்களுக்கு தற்காப்பு ஆயுத எவுகனை
எங்களுக்கு எங்கள் அருகிலுள்ள அரபு நாட்டவர்
அந்நியனாக நிற்கின்றனர்
எங்களோடு இணைந்து நிற்கும் இறைவன்
எங்களை உங்களிடமிருந்து பாதுகாப்பான்
எவுகனை அறிந்து அதனை உபயோகிக்கும் திறனறிந்து
நாங்களே எங்களை பாதுகாத்துக் கொள்ள இறைவன் திறன் கொடுப்பான்
- காசா மக்களின் நம்பிக்கை
Subscribe to:
Posts (Atom)




