Wednesday, November 6, 2013

இப்போதே ஒரு கானாப் பாட்டு அல்லது நாட்டார் பாட்டு, இல்லையென்றால், ஒரு நகைத்துளிப் பாட்டு பாடியே தீருவேன்!

 இராஜ. தியாகராஜன் சந்தக் கவிமணி கிருஷ்ணன்பாலா, உங்களின் அன்பிழியும் வாழ்த்தினுக்கு என்றன் உளமார்ந்த நன்றிகள்.

உள்ளாரும் ஒண்டமிழால் உளமே பொங்க
.....உயர்ந்தழகாய் ஒளிர்கின்ற வரிக ளிட்டு
துள்ளாட்டம் போடுகின்ற விருத்தம் போல
.....சுண்டுகின்ற சொல்லதனின் மணங்கள் வீசும்
கள்ளாரும் அலங்கலென பாட்டின் மாலை
.....கச்சிதமாய்க் கன்னலதன் சாறாய்த் தந்த
தெள்ளுதமிழ்ச் சந்தப்பா மணியே; நீவிர்
....சீர்த்தியுடன் வாழ்கவெனத் தந்தேன் வாழ்த்தே!
---------------------------------------------------------------------------------
Mohamed Ali
நீங்கள் ஒருவர்தான் சங்ககால தமிழை நினைவு படுத்துகிறீர்கள்
---------------------------------

@ தமிழார்வலர் முகமது அலி அவர்களே! பள்ளியில் படித்த யாப்பினை நினைவுறுக்கிறீர்கள்; செய்யுளியலை நினைவுறுத்துகிறீர்கள் என்றாவது சொல்லுங்கள்! இன்றைக்கிருக்கும் தமிழ்ச் சமுதாயம், நம்முடைய ஈராயிரம் ஆண்டுக்கும் முற்பட்ட செல்வங்களான சங்க இலக்கியங்களை ஏற்றி (தூரமாக) பேழையில் வைத்தது போல நீங்களுமா சங்கத் தமிழென்று சொல்லி, இந்தச் சின்னவனின் எழுத்தை ஏற்றி (தூரமாக) ஒரு பேழையில் வைக்கப் பார்க்கின்றீர்! விடமாட்டேன் (!!!!) இப்போதே ஒரு கானாப் பாட்டு அல்லது நாட்டார் பாட்டு, இல்லையென்றால், ஒரு நகைத்துளிப் பாட்டு பாடியே தீருவேன்! (சும்மா ஒரு பகடிக்காகச் சொன்னேன் அய்யா; உங்களின் அன்பினுக்கு என்றன் உளமார்ந்த நன்றிகள்!)

-------------------------------------------------------------------------------------------   
  

 இராஜ. தியாகராஜன்
    பணம், பதவி, செல்வம், சீர்த்தி(புகழ்), சிறப்பு, இவை யாவும் தாண்டி, மற்றவரை இயன்றவரை வாழ்த்துவது என்பது மிகவும் மேலான பண்பு. நானும் இயன்றவரைச் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால், செய்யும் பணியே என்னுடைய இறையென்ற குறிக்கோளால், முகநூலில் நீண்ட இடைவெளியாகிப் போய்விடுகின்றது. பணி நெருக்கம்; தோழமைகள் என்னை தயவு செய்து மன்னிக்க வேண்டுகிறேன். காலம் தாண்டிகூடப் பலருக்கும் பிறந்தநாள்/ மணநாள் வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறேன். எவரையும் நான் வாழ்த்த விடுபட்டிருப்பின், எனை மன்னித்து, என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகளை ஏற்க வேண்டுகிறேன். தாமதம் என்றாலும், பிறந்தநாளின் இனிமையென்பது ஆண்டு முழுமைக்கும் என்பதால், இந்த மறதிக்காரனின் தாமதமான வாழ்த்துகளை ஏற்க வேண்டுகிறேன்.
-------------------------------------------------

Tuesday, November 5, 2013

ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் விடுங்கள்..

  நான் பிறக்கும் பொழுது கோவை மாவட்டத்தில் இருந்தது.இப்பொழுது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. பழநி,உடுமலைப்பேட்டை,தாராபுரம் நகர்களுக்கு மத்தியில் இருக்கிறது.

  நான் மூன்று வயதில் தாயை இழந்தவன்.என தந்தை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்கள்.என்னுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரர்கள் ஐந்து சகோதரிகள்.

நான் டாக்டர் முர்சி

அஸ்ஸலாமு அலைக்கும்,

"நான் டாக்டர் முர்சி. எகிப்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர். நான் நிற்கும் இந்த நீதிமன்றம் சட்ட விரோதமானது. ராணுவ புரட்சிக்கு காரணமானவர்கள் அனைவரும் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்" - டிசம்பர் 2012ல் அதிபர் மாளிகைக்கு வெளியே நடந்த கலவரத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அதிபர் முர்சி நேற்று எகிப்திய உச்ச நீதிமன்றத்தில் கூறிய வார்த்தைகள் இவை. ராணுவ கிளர்ச்சிக்கு பிறகு முதன் முதலாக வெளி உலகிற்கு அவர் கொண்டுவரப்பட்டதும் நேற்று தான்.

Monday, November 4, 2013

இருட்டில் பிறந்து வெளிச்சத்தில் வளரும் ஆச்சரியம் !

ஹிஜ்ரி -
ஓர் அதிசயம் !
இருட்டில் பிறந்து
வெளிச்சத்தில் வளரும்
ஆச்சரியம் !

தாய் வயிற்றில்
இருக்கும் வரை
கரு !
பிறந்தால்தான்
அது
குழந்தை !
கலைந்துபோனால்
குருதிக் குவியல் !

முக்காலமும் அறியும் திறன் ..

எக்காலத்திலும் என்னோடு இருப்பேன் என்றாய்
முக்காலமும் அறியும் திறன் பெற்றாயோ!

என்னோடு போராடும் திறன் பெற்றாய்
போர் செய்ய போர்தளம் புறப்பட்டால்
போராட்ட மனம் கொண்டு தடை செய்யும் மனமேன்
போர் களத்திலும் உடனிருந்து போர் செய்ய விருப்பமோ!

வரும் விருந்தினரை கவணித்து
காலம் கடத்தாமல் அனுப்பி வைக்கின்றாய்
காலம் கடந்து நான் வந்தால்
கடுஞ் சினம் கொண்டு அகன்றுச் செல்கின்றாய்
எக்காலமும் என்னுடன் இருப்பேன் என்று சொன்னதனை மறந்ததேன்!

இமாம்கள்,ஹதீஸ் தொகுப்புகள்,இமாம் புஹாரி (ரஹ்) வரலாறு

 இமாம்கள் ஜீவித்த வருடங்கள்

    அபூஹனிபா (ரஹ்)     70 ஆண்டுகள் ஹிஜ்ரி 80 முதல் 150 வரை
    மாலிக் (ரஹ்)     86 ஆண்டுகள் ஹிஜ்ரி 93 முதல் 179 வரை
    ஸாஃபி (ரஹ்)         54 ஆண்டுகள் ஹிஜ்ரி 150 முதல் 204 வரை
    ஹம்பல் (ரஹ்)     77 ஆண்டுகள் ஹிஜ்ரி 164 முதல் 241 வரை

ஹதீஸ் தொகுப்புகள்

பற்பல ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு  நூல்கள், உண்மையான ஆறு ஹதீஸ்  நூல்களின் தொகுப்பு எனக் கருதப்பட்டு "ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றது இந்த ஆறு ஹதீஸ் நூல்கள் சஹீஹுல் புகாரி, ஷஹீஹ் முஸ்லிம், ஸூனன் நஸயீ, ஸூனன் அபூதாவூத், ஸூனன் திர்மிதீ,ஸூனன் இப்னுமாஜா என  வரிசைப் படுத்தப்படுகின்றது . இந்த ஆறு நூல்களும் ஹிஜ்ரி 3ம்  நூற்றாண்டில் தொகுக்கப் பட்டன .இந்நூல்களின் விபரம் வருமாறு.

        பெயர்                         பிறப்பு -இறப்பு   ஊர் நாடு
1. புஹாரி(ரஹ்)               194 - 256 ஹி   புகாரா ரஷ்யா

2. முஸ்லிம் (ரஹ்)       206 - 261 ஹி  நைஷாபூர் பாரசீகம்

3. நஸயீ (ரஹ்)              214 - 303 ஹி  ஈரான் (குராசான்)

4. அபூதாவூத் (ரஹ்)    202 - 275 ஹி    ஸிஜிஸ்தான் இராக்

5. திர்மிதீ209 -              279 ஹி                     திர்மிதி     குராசான்
 
6. இப்னுமாஜ்ஜா           202 - 273 ஹி   கஸ்வின் அஜர்பைஜான்


மத்ஹப்   பற்றி அறிய இந்த பக்கத்தை படிப்பதின் மூலம் தெளிவு பெறலாம். இன்ஷா அல்லாஹ்http://www.readislam.net/four.html

Source : http://www.readislam.net/portal/archives/1948

------------------------------------------------------------------------------------

முகிலே முகிலே

பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா