Tuesday, July 3, 2012

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் SUMAZLA/சுமஜ்லா

 சாதனைகள்  பெண்களுக்கும் தடையில்லை. சுமஜ்லா அவர்களும் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் சுமஜ்லா அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார். உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு  எடுத்து  உரைப்பவரே  உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர். இந்த வழியில் சுமஜ்லா அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
 
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

தயவு செய்து அவசியம் கீழ்  உள்ள லிங்க்குகளை  சொடுக்கிப்(கிளிக்) செய்து பாருங்கள்( படியுங்கள்)

 என்' எழுத்து இகழேல் http://sumazla.blogspot.in/

SUMAZLA/சுமஜ்லா blogs

SUMAZLA/சுமஜ்லா வலைப்பூக்கள்:


நீடூர் அலி Nidur Ali

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness." S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L.,
(nidurali)
Nidur.
Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.

Monday, July 2, 2012

மனிதன் மாற்றத்திற்கு உட்பட்டவன்.

  சிலர் நம்மை நாடி வருவது மகிழ்வு .சிலர் நம்மை விட்டு பிரியும் பொது துயரம் .மற்ற சிலர் நம்மைவிட்டு விலகும்போது ஆனந்தம். ஒருவரது செயல்பாடுகள் இத்தனை மாற்றங்களை  ஏற்படுத்துகின்றன.
சிலதை பார்க்கிறோம். சிலவற்றை கவனிக்கிறோம் மற்ற சிலவற்றை காணாமல் தவிர்க்கின்றோம்.

 சிலவற்றை படிக்கிறோம் சிலவற்றை படிப்பதை வெறுக்கிறோம் மற்ற சிலவற்றை படித்து மனதில் நிறுத்திக் கொள்கிறோம்.
சில உணவு ஒருவருக்கு உடலுக்கு ஊட்டம் தருகின்றது மற்ற சில உணவுகள் அவருக்கு ஒவ்வாமையை தந்து அவதிக்குள்ளாகின்றது. சில உணவுப் பண்டங்கள் மீது ஒருவருக்கு   மிகவும் நாட்டம் அவருக்கே மற்ற உணவைக் கண்டால் பிடிப்பதில்லை  . ஒருவருக்கு ஒருவர் சுவைப்பதிலும் ரசிப்பதிலும்  மாற்றம். ஒரே மாதிரியாக சுவைப்பதிலும் ரசிப்பதிலும் அனைவருக்கும் இருந்தால் அது திண்டாட்டதில் வந்து முடியும். பற்றாக்குறை வராமல் இருக்க இந்த மாற்று நிலை உதவுகின்றது. அனைவரும் சிகப்பு பெண்தான் வேண்டுமென்றால் இது இயந்திரத்தால் செய்யக் கூடிய காரியமல்ல. அப்படி அனைத்தும் சிகப்பாக இருந்தாலும் அது வெறுத்து விடும்.மனிதன் மாற்றதினையே விரும்புபவன். மனிதன் மாற்றத்திற்கு (குழந்தையாய் இருந்து முதியோர் வரை) உட்பட்டவன்.

Sunday, July 1, 2012

அந்தரங்கமாய்ப் பேசும் குரல்களைக் கேள்


உனக்கும் உனக்கும் கிடைத்த
ஒப்பற்ற நேரம்
தனிமை
*
உன்னோடு உன்னைச் சேர்த்துப் பார்க்கவும்
உன்னிடமிருந்து உன்னைப் பிரித்துப் பார்க்கவும்
அற்புத நிமிடங்களைத் தரும் ஞானவொளி
தனிமை
*
தனிமையின் வெளிச்சத்தில்
கடந்துபோன வாழ்க்கையை
அன்று தெரியா நிஜங்களோடும்
இன்று தெரியும் நிதரிசனங்களோடும
ஆழ ஊன்றி அலசிப் பார்க்கலாம்
*
தனிமையின் இருளில்
நீ எதை சத்தியமாய் விரும்புகிறாயோ
அது மட்டுமே
உன் எண்ணங்களில் திரள்வதைக் கண்டு
உன் எதிர்கால நாட்களை
வளமையாக அமைப்பதெப்படி என்று
துல்லியமாய்க் கணிக்கலாம்
*

கோபம் கொன்றுவிடும் !

 உயிரினம் அனைத்துக்குமே கோபம் வருவது இயல்பு. சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனுக்கும் கோபம்  வரும். மனிதனைத் தவிர மற்ற இனங்களுக்கு வரும் கோபம் தற்காலிகமானது ஆனால் மனிதனுக்கு வரும் கோபம் பல்வகையானது.அது வந்து மறையும் சமயத்தில் மனதில் நிலைத்து நிற்கும். மின்னல் வேகத்தில் வந்து அதே வேகத்திலும் மறையும், கோபம் வருவது இயல்பு. அது மனித உணர்வுக்கு உள்ளடக்கம். கோபம் வர ஒரு காரணமும் இருக்கலாம். கோபப்படுவதற்கு கோபப்பட்டுத்தானே ஆக வேண்டும். கோபத்தின் அளவுகோல் அதிகமாக அதனால் விளையும் பாதிப்பும் அதிகமாகின்றது. கோபம் அதிகமாக வருவது அதிக இரத்த அழுத்தம் உள்ளவருக்கும்,தாழ்வு மனப்பான்மை உடையவருக்கும்.அதிக கவலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தூக்கம் குறைவாக உள்ளவர்களுக்கும், பிரச்சினையை தீர்க்க வழி தெரியாமல் திண்டாடுபவர்களுக்கும்  இது அதிகம் வர வாய்ப்புள்ளது. கடுமையான கோபம் மனதை பாதிப்பதோடு உயிரையே போக்கி விடும் ஆற்றலுள்ளது,  இது குறிப்பாக அதிக இரத்த அழுத்தம் உள்ளவரின் உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும்.  கோபம் கொள்வதால் .ஆரோக்கியத்தையும் அழித்துவிடும். கோபத்தில் எடுக்கக் கூடிய சில முடிவுகள் வாழ்வையே தலை கீழகாக  புரட்டி எடுத்து விடும் அல்லது வாழ்ந்த சுவடுத் தெரியாமல் அழித்து விடும். 
ஒருவருக்கு கோபம் வந்து அதனால் மற்றவரை பழி வாங்கும் திறனிருந்து ஆனால் கோபத்தை தணித்துக்கொண்டு கோபம் உண்டாகியவரை மன்னித்தாரோ அவர்தான் உயர்ந்தவர். கோபத்தை கட்டுப் படுத்துபவனே சிறந்த வீரன்.

தேரிழந்தூர் தாஜுதீன் "நம்மோடு தாஜ் " பாகம் -3

தேரிழந்தூர் தாஜுதீன் "நம்மோடு தாஜ் " தேரிழந்தூர் தாஜுதீன் Moon T. V க்கு பேட்டி தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

நீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்!


  நீ என்னை பாராட்டு  நான் உன்னை பாராட்டுகின்றேன்! இது சொல்லாமல் சொல்லும் வேண்டுதல். இதனை சிலர் முன்பே திட்டமிட்டும் செயல்படுவர். உன்னை ஒருவர் உன் பேச்சுத் திறமைக்காக பேச அழைப்பார். அழைத்தவரை பாராட்டவேண்டுமல்லவா! அதோடு நிறுத்தி விட்டால் நல்லதல்ல மேடையில் உள்ளவரையும் மற்றவரையும் பாராட்ட வேண்டும். பாராட்டுதலினாலேயே அவர்கள் மயங்க வேண்டும் அது சிறிது நேரம்  அதிகமானால் கேட்க வந்தவர்கள் அந்த இடத்திலேயே தூங்கிவிட வேண்டும் அல்லது அந்த நேரத்தில் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச வாய்ப்பு கிடக்க வேண்டும் அல்லது இடைவேளை கிடைத்துவிட்டதாக முடிவு செய்து வெளியில்  சென்று  தேவையானதை  முடித்து விட்டு வரவேண்டும்.
 
      உயிரோடு உள்ளவர்களைப்  பாராட்டுவதால்   உனக்கு ஒரு ஆதாயம் கிடைக்கும் . பாராட்டப்பட  வேண்டியவர்க்கு அதற்கு தகுதியானவரா என்ற சிந்தனை தேவையில்லை. புகழ்ச்சிக்கு   அடிமையாகதவன் யார்! ஒருவனுக்கு மிகவும் பிடித்தது அவன் பெயர் அல்லது மரியாதையுடன் அவரை அழைக்கும் பெயர். இறந்தவர்களை பாராட்டுவதால் அவர்  எவ்வளவு சேவை செய்திருந்தாலும் பயன் கிடைக்காது. கிடைக்கலாம் அவரின் குடும்பத்தினைச் சார்ந்த அல்லது  அவர் விரும்பியவர் அந்த மேடையில் இருந்தால்! நம்மிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லையெனில் நம் மூதாதையர்  அருமைகளைப் பற்றி பேசித்தானே காலத்தை ஓட்ட வேண்டும்.ஒருவரை பாராட்டுவதுபோல் சிலேடையாக் விமர்சனம் செய்பவர்களும் உண்டு.
நன்றி காட்டுவதற்காக பாராட்டி மகிழ்வது இயல்புதான் அதையே காரியம் ஆவதர்க்காகவே பாராட்டுவதும் ஒரு திறமைதான்.

    ஒருவரை பாராட்டுவதால் அவர் மேலும் நல்ல செயல்கள் செய்வதற்கு தூண்டப்படலாம். அந்த பாராட்டே அவருக்கு 'தலைகனம்' தந்து தாழ்ந்துப் போவதற்கும் வழிவகுக்கலாம். மிதமிஞ்சியது ஆபத்தானது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம (பாசனம்) ஒரு சிலர் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வார்கள் அதிலும்  பெரிய விளம்பரமாக செய்யவும் முற்படுவார்கள். தானே செய்துக் கொள்பவர்களும் உண்டு  அதற்காக பணம் கொடுத்து மற்றவர்களை செய்யும்படி தூண்டுபவர்களும் உண்டு.     

 பாராட்டாதவன் பாராட்டப்பட தகுதி இல்லாமல் போய் விடுவான். அதனால் பாராட்டியே பிழைத்துக்கொள்ள ஒரு வழி இருக்கும்போது அதை ஏன் நழுவ விடுவானேன்!.
வளர்க  பாராட்டும் செயல்