Showing posts with label சிங்கப்பூர். Show all posts
Showing posts with label சிங்கப்பூர். Show all posts

Thursday, October 24, 2019

எழில்மிகு சிங்கப்பூரில், சமீபத்தில் ஐந்தாவது சர்வதேச விமான நிலைய முனையம் (international airport terminal 5) திறக்கப்பட்டது.

எங்கும் நிறந்தோனே இருகரம் ஏந்துகிறேன்,
சங்கை மிகுந்தோனே சஞ்சலம் தீர்த்துவிடு யா இறைவனே!

எழில்மிகு சிங்கப்பூரில், சமீபத்தில் ஐந்தாவது சர்வதேச விமான நிலைய முனையம் (international airport terminal 5) திறக்கப்பட்டது. இந்த ஐந்து விமான நிலையத்திற்கும் வரவேற்பு நிலையமாக ஜுவல் (JEWEL) திறக்கப்பட்டது.

இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிகப் பிரமாண்டமாக நீர்வீழ்ச்சி, தொங்கு தோட்டம், நவீன முன்மாதிரி உணவுவிடுதிகள், சிறார்கள் விளையாடும் இடங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் etc.

மொத்தத்தில் அனைத்தும் முத்தான இடங்கள்

எல்லாப் புகழும் இறைவனுக்கே
Hidayathun Nayeem

Saturday, March 9, 2013

Singapore - சிங்கார சிங்கப்பூர்

   
அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது.
அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது   பல  இன ஐக்கியத்திற்குப் பாராட்டு.
  சிங்கப்பூர் இப்போதைய தலைமைத்துவத்தின் கீழ் நெடுங்காலம் அரசியல் உறுதிப்பாட்டுடன் விளங்கி வரும்  சிங்கப்பூரில் விரைவான பொருளாதார் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு வலுவான தலைமைத்துவமும் மக்களின் கடின உழைப்புமே காரணம்.இந்த இரண்டு சிறப்புகளையும் பெற்றிராததால் தான்  வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் பல தலை தூக்க முடியாத நிலைமையில் இன்று  இருந்து  வருகிறது.
   வளச்சி  வரும் ஆசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த முன்னோடியாக திகழ்கிறது. வளச்சி பெற்றுள்ள நாடுகள் கூட சிங்கப்பூரிடமிருந்து  சிலவற்றை எடுத்துக்கொள்ள  இயலும். பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.

Tuesday, March 5, 2013

நல்ல வாசகன் படைப்பாளி ஆகலாம்

இலக்கியப் பங்களிப்புக்காக இந்த ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் பெற்றவர் மூத்த தமிழ் எழுத்தாளர்

ஜமாலுதின் முகமது சாலி.

சிங்கப்பூரிலும் தமிழகம் உட்பட பல நாடுகளிலும் ஏராள விருதுகளும் சிறப்புகளும் பெற்றிருக்கும் அனுபவமிக்க ஊடகத் துறையாளருமான திரு ஜே.எம்.சாலி தமது இலக்கியப் பணிகள், பார்வைகள், திட்டங்கள் குறித்து தமிழ் முரசுடன் பகிர்ந்து கொள்கிறார்.

“எழுத்து மூலம் சமூக மாற்றங்களைச் செய்யலாம்” என நம்பும் நீங்கள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் என்ன?

நாட்டு நடப்பையும் சமூக யதார்த்தங்களையும் பதிவு செய்யும் எனது எழுத்துகளின் மூலம் சிங்கப்பூரர்களின் மனோபாவத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன் என்று உறுதியாகச் சொல்வேன். பல நிகழ்வுககளை எடுத்துக் காட்டலாம்.

சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சீனப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வை ‘அலைகள் பேசுகின்றன’ என்ற நூலில் பதிவு செய்துள்ளேன். இனம் மாறி திருமணம் செய்து கொள்வது குறித்த மனோபாவம் காலப்போக்கில் மாற்றியுள்ளதாக நம்புகிறேன்.

”நல்ல வாசகர்கள் எழுத்தாளராகலாம். இது எனது அனுபவம். எனது பள்ளிப் பருவத்திலேயே நிறைய வாசிக்கத் தொடங்கினேன். நிறைய எழுதத் தொடங்கினேன். எனக்கு ஆதரவும் கிடைத்தது. சமூகமும் ஊடகங்களும் என்னை உற்சாகமூட்டின.

நிறைய வாசிக்கத் தூண்டுவதே எழுத்தாளர்களை உருவாக்குவதன் முதற் கட்டம். வாசிக்க, வாசிக்க அவர்களுக்கே எழுதும் ஆர்வம் ஏற்படும். எழுத்தாளர், இலக்கியவாதி எவரும் பிறப்பிலேயே உருவாகுவதில்லை. அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.”

- ஜே.எம். சாலி

கலாசாரப் பதக்கம் பெற்ற எழுத்தாளராக உங்களது அடுத்த இலக்கியப் பங்களிப்பு என்ன? அரசாங்கம் வழங்கும் $80,000 மானியத் தொகையில் எத்தகைய பணிகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?

எனது வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த தமிழவேள் கோ.சாரங்கபாணியுடன் வேலை செய்த அனுபவங்கள் பற்றி விரிவான ஆய்வு கட்டுரையை எழுதவுள்ளேன். அத்துடன் சிங்கப்பூரின் நலனுக்காகப் பாடுபட்ட முன்னோடிகளாகிய அமரர் கோவிந்தசாமி பிள்ளை, பக்கிரிசாமி பிள்ளை, யூசோஃப் இஷாக் போன்றவர்களைப் பற்றியும் ஆய்வு கட்டுரைகளை எழுதவுள்ளேன். அடுத்த தலைமுறையினருக்கு நமது நாட்டின் முன்னோடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியது எழுத்தாளர்களின் கடமைகளில் ஒன்று.

Monday, November 5, 2012

முதுபெரும் எழுத்தாளர் ஜே.எம்.சாலி அவர்களுக்கு சிங்கப்பூரின் உயரிய கலாச்சார விருது கிடைத்துள்ளது



முதுபெரும் எழுத்தாளர் ஜே.எம்.சாலி அவர்களுக்கு சிங்கப்பூரின் உயரிய கலாச்சார விருது கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள். அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்க பிரார்த்திக்கிறேன். அவருடைய பணி தொடரட்டும்." நாகூர்  ரூமி

ஜே .எம் சாலி அவர்கள் எனது உறவினர் ,நண்பர் ,சமகாலத்தில் படித்தோம் .(நான் சென்னை லயோலா அவர் பிரெசிடென்சி) எனது தாய் மாமாவின் பேத்தியை மணமுடித்தவர் . வாழ்த்துகள். மகிழ்வு


(படத்தில் வடகரை மகதி,ஜே .எம் சாலி, முகம்மது அலி ஜின்னா- சிங்கப்பூரில்)



ஜே .எம் சாலி அவர்களது குடும்பத்தில் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள். ஜே .எம் சாலி அவர்களது அண்ணன் ஜே .எம் ஹுசைன் அவர்கள் மிகவும் சிறந்த எழுத்தாளர். இவர்களது சொந்த ஊர் எரவாஞ்சரி. அவரது வாழ்க்கைத் துணைவி நீடூரைச் சார்ந்தவர் .

சிங்கப்பூர் நான் முதல் முறையாக சென்ற பொது உடனிருந்து  சிங்கப்பூர் சுற்றிப்பார்க்க மிகவும் உதவினார் .அவர் அப்பொழுது தமிழ் முரசு தமிழ் தினசரியில் பணியாற்றி வந்தார் .
அந்தப் பத்திரிக்கையில் என்னை பேட்டி கண்டு எழுதினார்.
"அரசியல் உறுதிப்பாடினால்   சிங்கப்பூர் வழிகாட்டுகிறது " என்று அதற்கு தலைப்பு கொடுத்திருந்தார்.

தமிழக வர்த்தகர் கருத்து பல இன இக்கியத்திற்குப் பாராட்டு
சிங்கப்பூர் இப்போதைய தலைமைதுவத்தின்  கீழ் நெடுங்காலம் அரசியல் உறுதிப்பாட்டுடன் விளங்கி வரும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்த்தகரும், வழக்கறிஞருமான திரு எஸ்.இ.எ.முகம்மது அலி ஜின்னா தெரிவித்தார் .
....என்பதோடு அந்த செய்தி தொடர்கிறது (தமிழ் முரசு 7-12-1970)

தொடர்ந்து படிக்க அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது,

 முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.)

(nidurali" "நீடூர்அலி") 















Monday, January 3, 2011

அந்த விழா தந்த திருப்புமுனை! by டாக்டர் ஹிமானா சையித்

சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலின் இரண்டாவது மாடியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பன்னோக்கு மண்டபம்! பள்ளியில் மஹ்ரிப்தொழுது முடித்து விட்டு அவசரமாக மண்டபத்துக்குச் சென்றேன்.கூட்டம் தொடங்கப்பட்டில்லை. முதல் வரிசையில் நான் சந்திக்கச் சென்ற முக்கிய மனிதர் இருந்தார்கள். என்னை அவர்கள் - அந்த நேரத்தில்-இடத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.ஓரு சில நிமிடங்கள் அன்புடன் உரையாடல். மாலை 6.15 மணிக்குத்தான்எனக்கு அவர்கள் அன்று சிங்கப்பூரில் உரை நிகழ்த்துகிறார்கள் என்ற செய்தி கிடைத்திருந்ததால், முக்கிய வேலைகளை ஒத்தி போட்டுவிட்டு ஓடோடிப் போனேன். சந்தித்ததில் பெரிய நிறைவு!
புகழனைத்தும் இறைவனுக்கே !
அந்த முக்கியப் பிரமுகர்..
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாவின் புதிய தலைவர் கண்ணியத்துக்குரிய மௌலானா ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி ஹளரத்அவர்கள். தேர்தல் முடிந்தவுடனேயே அவர்கள் உலமாக்கள் சபையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தகவல்தெரிந்திருந்தேன்.
'சிந்தனைசரம்' இதழில் அவர்கள் அளித்திருந்த பேட்டியையும் படித்திருந்தேன்.

அவர்கள் அப்போது சிங்கப்பூர் வந்திருந்ததுஅவர்கள் ஹஜ் வழிகாட்டியாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த தனியார் ஹஜ் கமிட்டியின் சிங்கப்பூர் கிளை தொடக்க விழா சம்பந்தமா! ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டுதல் உரை நிகழ்த்தப்பட்டது. வழக்கம் போல் அழுத்தமான ஓர் உரையில் ஹஜ்ஜின் தத்துவார்த்தங்கள்-அதுபோழ்து சந்திக்க நேரும் பல நடை முறை சங்கடங்களும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும் அனைவருக்கும் புரியும் வண்ணம் விளக்கப் பட்டன.

1989 -ம் ஆண்டின் ஷ·பான் மாதம் பிறை 29 என நினைக்கிறேன்.மயிலாடுதுறையில்'மஸ்ஜிதே மஹ்மூதியா' புதிய பள்ளிவாசல் திறப்புவிழா.கிட்டத்தட்ட60 -70 ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட மிகப் பெரிய விழா  இலக்கியச் சித்தர் நீடூர் ஏ.எம்.சயீது அவர்கள் என்னையும் ஒரு முக்கியப் பேச்சாளாராக அழைத்திருந்தார்கள்.

நான் கதாசிரியர் ஆனது 1987 அக்டோபர் மாதம். ஆனால், இறையருளால், அவ்வளவு குறுகிய காலத்துக்குள்ளேயே பரவலான அறிமுகம் கிடைத்திருந்தது. சமுதாயத் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் சமது ஸாஹிப் அவர்களின் 'மணிச்சுடர்' நாளிதழ் என்னை சமுதாயத்துக்கு ஒரு சமுதாயக் களப்பணி ஊழியனாக அறிமுகம் செய்வித்திருந்தது. வாரம் இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதுவேன் என்பதால் ஏராளமான வாசக பலம்.

என்னுடைய உரையின் சாரம் சமுதாயத்துக்கு தாட்சண்யமில்லாமல் மார்க்கவிழுமியங்களை எடுத்துரைக்கும் ஆலிம்கள் தேவை என்பதாக இருந்தது. நான் அந்தத் தலைப்பைத் தேர்வு செய்ய சில காரணங்கள் இருந்தன. நேரிலும் - சில சமுதாயப் பெரியவர்கள் - நிர்வாகிகள் மூலம் கிடைத்திருந்த சில தகவல்களின் அடிப்படையில் அந்தத்தலைப்புத் தேர்வு!

நான் பல்லாயிரம் மக்கள் கலந்து கொள்ளும் அவ்வளவு பெரிய கூட்டத்தில்அதற்கு முன் உரைநிகழ்த்தியதில்லை. ஆக்ரோஷமான பேச்சு! இடையில் கொஞ்சம் குறுக்கிட்டு பேச்சின் காரத்தைக் குறைக்கலாமா? என்று கூட சயீது ஹாஜியார் அவர்கள் நினைத்தார்களாம். என் உரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் கூட. மனதில் விளக்க முடியாத ஒரு பரவசம்; ஆனந்தம்!அகந்தை என்று கூடச் சொல்லலாம்.


எனக்குப் பிறகு பேச வந்தவர்கள் ஓ.எம்.ஏ.பாகவி அவர்கள்!அதற்கு முன் அவர்களை நான் நேரில் சந்தித்ததில்லை.அவர்களது உரைத் தொடக்கமே என் உரையைத் தொட்டதாயிற்று. அவர்கள் பேசப் பேச என்னுள் இருந்த
'கித்தாப்பு' சரியத் தொடங்கியது. அந்த நாள் - அந்த விழா -அவர்களின் அந்த உரை-என் களப்பணி வாழ்வில் ஒரு தெளிவையும், அடக்கத்தையும் திருப்பு முனையையும் தந்தது!

சமுதாயத்தில் ஆலிம்கள் எவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவில் சமுதாயத்தில் பொறுமையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறர்¡கள்
என்பது பற்றி ஏற்கனவே 'முஸ்லிம் முரசு' இதழில் 'சங்கல்பம்' என் ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன்.
என்றாலும் அன்று பத்து வரிகளில் ஹளரத் அவர்கள் கூறிய அறிவுரை அதன் பிறகு என்னை அப்பிரச்சினை பற்றி அதிகமாக உள்நோக்கிப் பார்க்க வைத்தது. அதன் பிறகு 'ஆலிம்களும் சமுதாயமும்' என்ற தலைப்பில்
மணிச்சுடரில் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். அதன் மூலம் மூத்த மார்க்க அறிஞர், ஜமாஅத்துல் உலமா மாத இதழின் ஆசிரியர் அபுல் ஹஸன் ஷாதலி ஹளரத் அவர்களின் பார்வையில் பட்டு, அவர்களது அன்பில் அவர்களது வாழ்நாள் முழுக்க இழையும் வாய்ப்பை அல்லாஹ் தந்தான்.

ஓ.எம்.ஏ. ஹளரத் அவர்களுடன் அன்று மயிலாடுதுறையில் ஏற்பட்ட அறிமுகம் பிறகு பல ஆலிம்களுடன் ஆரோக்கியமான தொடர்புகள் ஏற்பட வாய்ப்புக்களை உருவாக்கின. ஓ.எம்..ஏ.அவர்களுடன் தமிழகமெங்கும்
பல மேடைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்கள் அமைந்தன. அது ஒரு நீண்ட கதை! அன்று மயிலாடுதுறை விழாவில் அவர்கள் கேட்டார்கள்: "இன்று
மார்க்க மேடைகளுக்கு வந்து ஆக்ரோசமாக உரையாற்றும் உலகக் கல்விப் பட்டதாரிகளே!
உங்களுக்கு மார்க்கம் சொல்லித்தந்தவர்கள் யார்? நீங்களாகவா கற்றுக் கொண்டீர்கள்?
அதன் பின்னணியில் ஆலிம்கள் இல்லையா?ன்று ஆலிம்கள் நேரில் சொல்லி அறிந்திருப்பீர்கள் அல்லது ஆலிம்கள் எழுதியதைப் படித்து அறிந்திருப்பீர்கள் .. இல்லையா?"அதன் பிறகு நாங்கள் மேடைகளில் பல விழாக்களில் கலந்து கொண்டுள்ளோம். அவ்வப்போது என்னைப் போன்ற ஆலிம்கள்அல்லாத பேச்சாளர்கள் அன்று நான் மயிலாடுதுறையில் பேசிய பாணியிலேயே உணர்ச்  வசப்பட்டுப்பேசிய போதெல்லாம் ஹளரத் அவர்களது உரையில் அதற்கு ஏற்புடைய பதில் தந்து அவர்களையும் மென்மைப் படுத்தியதைக் கண்டிருக்கிறேன்.
ஓ.எம்.ஏ. பாகவி அவர்களிடம் உள்ள இன்னோர் உயர்ந்த -எனக்குப் பிடித்த அம்சம் அவர்கள் எந்தப் பேச்சாளர் பேசும்போதும் (அவர் ஓர் அறிமுகப் பேச்சாளராக இருந்தாலும் கூட)ஒரு மாணவனின் ஆர்வத்துடன்-கடமையுணர்வுடன் கொஞ்சமும் கர்வமில்லாமல் குறிப்பெடுத்துக் கொள்ளும் பழக்கமாகும். அது இன்றும் தொடர்கிறது; அன்று சிங்கப்பூரிலும்அதனைக் கண்டேன்! ஆலிம்கள் மீது அக்கறை கொண்ட  அவர்கள் ஆலிம்களின் பேரவையான 'ஜமாஅத்துல் உலமா'வுக்குத் தலைமைப் பொறுப்பை
ஏற்றிருப்பது உண்மையில் பொருத்தமானதே
.டாக்டர் ஹிமானா சையத்
( 'ஊற்றுக்கண்' எனது 36- வது நூல்.
அதில் சில கட்டுரைகள் என் வாழ்வில் சந்தித்த ஆலிம்கள்)

Saturday, November 27, 2010

மனம் மகிழுங்கள்! - 24 : நன்னம்பிக்கை

மனம் மகிழுங்கள்!
24 - நன்னம்பிக்கை
- நூருத்தீன்
யானையின் பலம் எதிலே?
தும்பிக்கையிலே!
மனிதனோட பலம் எதிலே?
நம்பிக்கையிலே!

- என்று தமிழ்க் கவிஞரொருவர் எழுதியிருந்தார்.

நம்பிக்கை!

அது நம் ஒவ்வொருவருக்கும் உண்டு; எக்கச்சக்கமாய் உண்டு. மறுப்பவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது அதற்குள்ளோ தங்களது விரல் நகங்களில் தீட்டப்படும் கறுப்பு மையை உற்றுப் பார்த்துக் கொள்ளலாம். என்றாவது, எப்படியாவது, யாராவது ஓர் ஆட்சியாளர் நீதி, நேர்மையுடன் நம்மை ஆளத்தான் போகிறார் என்று நம்பவில்லை?


தவிர, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் அமைந்திருந்தாலும் “இந்த முறை கணவன் தன்னை எப்படியும் முதல்முறையாக ப்ஃளைட்டில் ஏற்றி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறான்,” என்று ஒரு நடுத்தரவர்க்க மனைவிக்கு நம்பிக்கை. “வரதட்சணையா? அதென்ன கற்கால வழக்கம்? பெண்ணை மட்டும் தாருங்கள்” என்று ஒரு ராஜகுமாரன் குதிரையிலோ, குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவிலோ வந்து நிற்கப் போகிறான், என்று பெண்ணைப் பெற்றவருக்கு நம்பிக்கை.

எதிர்மறையாய் வேறொரு வித நம்பிக்கையும் உண்டு.

மூட நம்பிக்கை!

தேர்விற்காக விடியவிடியப் படித்து, மாய்ந்து மாய்ந்து தயாராகி, தேர்வுத் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முழுகி, கடைசியில் கப்போர்டிலுள்ள பச்சைக் கலர் பேனாவைக் கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு “தேர்வை இந்தப் பேனாவில் எழுதினால் நிச்சயம் நான் பாஸ்,” என்று சின்னப்ப தாஸுக்கு ஒரு நம்பிக்கை.

தேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், “அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்,” என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.

பூனை குறுக்கே ஓடினால், “ஆஹா! சகுனம் சரியில்லையே!”

கிளம்பும்போது “எங்கே போகிறீர்கள்?” என்று யாராவது கேட்டுவிட்டால், “போகும் காரியம் உருப்பட்டாற் போலத்தான்.”

காக்கை கத்தினால், "விருந்தாளிகள் வரப்போகிறார்கள் பார்" என்று நினைக்க, விருந்தாளிகள் வந்து சேருவார்கள். அடுத்த முறை ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும்முன் மெயில், போன், எஸ்.எம்.எஸ்., என்று எதுவும் முயலாமல் நேரடியாய்ச் சென்று இறங்கி, திகைத்து நிற்பவரிடம் “என்ன காக்கை கத்தவில்லையா?” என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ, இப்படியான மூடநம்பிக்கைப் பட்டியல் நூறு பக்க நோட்டு அளவிற்கு நீளம்!

மனவியலாளர்கள் இதை மாற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உங்கள் மனம் எதை நினைக்கிறதோ – நல்லதோ கெட்டதோ - அதை அடைந்துவிடும் தன்மை கொண்டது!

“எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் தலைவலி வரும்” என்று நினைத்தால் அது உங்களைத் தவறாமல் வந்தடையும். “கூடுதலாய்க் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எனக்குத் தங்காது,” என்று நினைப்பவர்களுக்குப் பணம் ஏதும் உபரியாய்க் கிடைத்தாலே அது உடனே செலவாகிப் பர்ஸ் காலியாவது நிச்சயம் என்று தலையில் அடித்து “காட் ப்ராமிஸ்பா,” என்கிறார்கள்.

அமெரிக்காவில் கார்ல் சிமன்டண் (Dr. O. Carl Simonton) என்றொரு டாக்டர் இருந்தார். புற்றுநோய் மருத்துவர். தம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். ஒரே அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் இரு விதமான விளைவுகள் தென்பட்டன. “ஏன்?” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா! மனதிற்கும் உடல்நலனிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது,” என்றவர், புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்குக் கூட மருத்துவத்துடன் சேர்த்து மனப் பயிற்சி அளிக்கும்போது அவர்களது மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அவர்களது சொச்ச வாழ்நாளுக்கு உற்சாகத்தையும் மனக்கட்டுப்பாட்டுத் தரத்தையும் உயர்த்த முடியும் என்று ஆராய்ந்து நிரூபித்தார்.

தமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், “நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்.” அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.

வாழ்க்கையில் உங்களது மனம் எதை நம்புகிறதோ அதுவே உங்களுக்கு நிகழும். “என்னை யாரும் கண்டு கொள்வதில்லை; என்னிடம் சரியாகப் பழகுவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்,” என்பது உங்கள் மன நம்பிக்கையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது; என்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்,” என்று நம்புகிறவருக்கு அவர் வாழ்க்கையில் அவ்விதமே நிகழ்கிறது.

உங்கள் மனம் உங்களது கட்டுப்பாட்டில்! எதைச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தாம் முடிவடுக்கிறீர்கள். உங்கள் மனதிற்குள் எதைத் திணிப்பது என்பதையும் நீங்கள்தாம் முடிவெடுத்து நிகழ்த்துகிறீர்கள்.

நல்லதை நம்பி மனதிற்குள் நல்ல எண்ணங்களையே திணித்தால் வாழ்க்கையில் அகமும் முகமும் மகிழ்வுடன் திகழும்.


னம் மகிழ, தொடருவோம்...