Friday, May 22, 2015

தோழமை கொக்குடன் ... குளக்கரையில் திட்டமிட்டு .../ J Banu Haroon


தோழமை கொக்குடன் ...
குளக்கரையில் திட்டமிட்டு ...
ஒற்றைக்காலில் தவமிருந்து ...
தண்ணீர்க்குள் தலைநுழைத்து ....
தனியொரு மீன்பிடித்து .-நீ
தானேதின்ன முயல்கையில் ...

எதிர்மரக் கிளையொன்றில் ...
பார்த்திருந்த பருந்தொன்று ...
விருட்டென்று பறந்துவந்து ...
உன்வாய்மீன் கவ்விச்சென்று ..
தான்தின்று பசியமர்த்தி ...
உன்னைஏக்கப்பட விட்டதோ ....

இன்னும் காத்திருந்து ...
இருப்பதையும் பிடுங்கிவிட ...
எத்தனிக்கும் வேளையிது ...
உணர்ந்துகொண்டால் பிழைத்தெழு ...
சுதாரிப்பு இல்லையேல் ....
இருப்பதையும் இழந்துவிடு ...

ஏமாறுபவர் இருக்கும்வரை ...
ஏமாற்றுபவர் தொடர்ந்திருப்பர் ...
குழப்பமான மனநிலையில் ...
குழிபறிப்போர் தொடர்ந்திடுவர் ...
தள்ளியிரு ...தனித்துமிரு ...
தன்னலமற்றோர் அருகிலிரு ...
தான்தோன்றித் தனமெல்லாம் ..
தள்ளிவிட்டு பிழைத்தெழு ....

J Banu Haroon

No comments: