Wednesday, May 27, 2015

ரப்பே ! இவனை சுவர்க்கத்துக்கு சொந்தக்காரனாக ஆக்கிவிடு ! ரப்பே ரஹ்மானே ரஹீமே


உயிர்போனது உனக்கு அந்நிகழ்வால்
உயிர்போகிறது எனக்கு

உள்ளத்தால் நேசம்கொண்ட
உணர்வில் நிறைந்த

உலகமும் போற்றும்
உயிரானவனே

உயிரற்ற உன் உடல்
உயிரற்ற பலரின் உணர்வுகளையும்

உசுப்பிவிட்டதே உயிரே

ஊரார் உற்றார்
உளறிக்கொண்டே இருக்கின்றனர்
உன் உயர்வின் உன்னதத்தை

சீனா ஈனா குடும்பத்தின்
இன்னொரு வைரமன்றோ நீ

நெருங்கினாலும் விலகினாலும்
உன் வெளிப்பாட்டில்

உண்மையையும்
அக்கறையையும் மட்டுமே நிறைத்தவனே

உன்போல் ஆகுமோ இன்னொரு உயிர்

எவரை அழைத்தாலும் தேம்புதலை மட்டுமே
பதிலாய் சொல்கின்றனர்

என்னவனே ஊரார் போற்றும் உன்னதவனே
இரவு நடுநிசியில் அழைத்து நகைச்சுவை செய்வாயே

என் செய்வேன் என்செய்வேன்

இறைவா ...

இவனின் மரணம் கண்டு
இக்கணமும் ஏக்கம்கொள்ளும்

உற்றார்ஊரார் போற்றும் இவனின் உன்னதத்தை
வஜிபத் செய்வாயாக ...

இவனை பரிசுத்தப்படுத்து,
இவனை மன்னித்து விடு,

இவனை சுவர்க்கத்துக்கு
சொந்தக்காரனாக ஆக்கிவிடு

ரப்பே
ரஹ்மானே
ரஹீமே

லாயிலாஹா இல்லா அன்த
சுப்ஹானக இன்னி குன்தும் மினள்ளாலிமீன் ... !

--------------------------------------------------------------------------

கண் மூடினேன் உன்
காட்சிகள் தெரியுது

காதை மூடினேன் உன்
குரலொலிகள் கேட்குது

இதயம் மூடினால் உன்
நினைவுகள் முடியுமோ

தெளிவாக தெரிந்த எல்லாம்
மங்கலாய் தெரிகிறதே

ஷபி

என் விதியை உன்
கடினமாக உணர்ந்தவனே

உயிரோடு நீ இருந்தாய்
உயிரற்று நானிருந்தேன்

உயிரற்றுபோனவனே
உயிர்தந்து போனாயோ

உயிரே ... !
அ.மு.அன்வர் சதாத்
 
**********************************************************************************
மர்ஹும் முஹம்மது சபி அவர்கள் நீடூர் சீனா ஈனா S.E.அப்துல்காதர் அவர்களின் நான்காம் தலைமுறை.

நீடூர் சயீது,
Mohamed Ali அவர்களின்
அக்கா பேரன்

துபாய் கிரியேடிவ்ஸ் எனும் துபாய் நிறுவனத்தில் முதன்மை கணக்கர்,

கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு ஊரில் வந்து தங்கி வியாபாரம் செய்யவேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்து மயிலாடுதுறையில் குளோபல் ட்ராவல்ஸ் நிறுவனத்தை தொடக்கி மிக வேகமாக முதல்நிலை இடத்தை அடைந்தவர்.

நீடூர் நெய்வாசல் ரயிஸ்மில் தெரு மர்ஹூம் புகாரி அவர்களின் மகனார்

முஹம்மது சபி.

( புகைப்படத்தில் இருப்பவர் முஹம்மது சபி )
 - அ.மு.அன்வர் சதாத் . ..

No comments: