:
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பணியாளர் திறனாய்வு எனும் அப்ரைசல் நடக்கும். என்னுடைய டீமில் சுமார் எண்பது பேர். அவர்களை மிகநன்று , நன்று , மோசமில்லை, மோசம் , மிக மோசம் (Excellent, Good, Not Bad, Bad, Very Bad) என்று ஐந்து பிரிவுகளுக்குள் அடக்க வேண்டும். ஐந்துசதவிகிதம் பேரை, "மிக மோசம்" என்ற பிரிவில் ஒதுக்குவதுதான் எந்த மேனேஜருக்கும் மனசாட்சியை மென்று தின்னும் வேலை. ஏனெனில்அந்த ஐந்து சதவிகிதம் பேரின் வேலையும் பறிக்கப்படும். மேனேஜர் என்றவுடன் ஒரு கம்பெனியில் மேனேஜர் என்று ஒரே ஒருவர் இருப்பார் என்று நினைத்தீர்களானால் அது தவறு. ரெண்டு லட்சம் பேர் வேலைபார்க்கும் கம்பெனியில் மேனேஜர்களே ஆயிரக்கணக்கில் இருப்பர். அந்த ஐந்து சதவிகித விதி மேனேஜர்களுக்கும் பொருந்தும். ஆம் மேனேஜர்களும் வீட்டுக்கு அனுப்பப்படுவர். கம்பெனிக்கு நிதி நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இந்த ஐந்து சதவிகித விதி மிகக்கடுமையாகக் கடைபிடிக்கப்படும்.
Thursday, May 8, 2014
இவைகள் ஆரஞ்சு பழங்கள் அல்ல - எகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல்
இலக்கிய செயல்பாடுகளுக்கும், அதன் தொடர்ச்சியான வரலாற்றிற்கும் பெயர்போன எகிப்தில் பல அற்புதமான பெண் கவிஞர்கள் உருவாகி இருக்கிறார்கள்.அரபுக்கவிதையின் வலிமைமிக்க மொழியை, அதன் சூட்சுமத்தை, நெகிழ்வின் சலனத்தை உள்வாங்கி பல கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இமான் மெர்ஷலில் கவிதைகளும் முக்கிய இடத்தை பிரதிபலிக்கின்றன. அந்த பிரதிபலிப்பு இலக்கிய வானில் பட்டுத்தெறிக்கிறது. வாழ்வின் உன்னதங்களை, மகோன்னதங்களை பேசுபவை இமான் மெர்ஷலின் கவிதைகள்.
பாரம்பரிய நதியான நைலின் டெல்டா பகுதியில் மித் அத்லா என்ற கிராமத்தில் வைதீக கிறிஸ்தவ குடும்பத்தில் 1966 ல் பிறந்தார் மெர்ஷல். மேலும் அரபு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்த மெர்ஷல் 1988 ல் கெய்ரோவிற்கு சென்றார். அந்த தருணத்தில் நவீன அரபுகவிதை குறித்து கெய்ரோ பல்கலைகழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இதன் தொடர்ச்சியில் 1999 ல் கனடாவிற்கு புலம்பெயர்ந்த அவர் அங்குள்ள அல்பர்டா பல்கலைகழகத்தில் அரபு பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். தற்போது அதை தொடர்ந்து வருகிறார்.
பாரம்பரிய நதியான நைலின் டெல்டா பகுதியில் மித் அத்லா என்ற கிராமத்தில் வைதீக கிறிஸ்தவ குடும்பத்தில் 1966 ல் பிறந்தார் மெர்ஷல். மேலும் அரபு இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்த மெர்ஷல் 1988 ல் கெய்ரோவிற்கு சென்றார். அந்த தருணத்தில் நவீன அரபுகவிதை குறித்து கெய்ரோ பல்கலைகழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இதன் தொடர்ச்சியில் 1999 ல் கனடாவிற்கு புலம்பெயர்ந்த அவர் அங்குள்ள அல்பர்டா பல்கலைகழகத்தில் அரபு பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். தற்போது அதை தொடர்ந்து வருகிறார்.
பிரபஞ்சத்தின் பார்க்க வேண்டிய அற்புதக் காட்சி
பிரபஞ்சத்தின் விரிவு
பிரபஞ்சத்தின் அற்புத அளவு
பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எண்ணிக்கை அநேகமாக உலகின் அனைத்து கடற்கரை மணல் துகள்கள் எண்ணிக்கை போன்று உள்ளது .
பிரபஞ்சத்தின் மொத்த பொருள்கள் கணக்கிலடங்காதவை.
விண்மீன் குழுவில் கோடிக் கணக்கில் நட்சத்திரங்கள்
Wednesday, May 7, 2014
எழுதி !எழுதி !!
பாரமிருக்காது என்று நினைத்துத்தான்
ஒவ்வொரு சுமைகளையும் தூக்குகின்றேன்
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை !
வாழ்க்கையின் தத்துவம் படிப்பினையாகமாறிப் போகின்றது .
தூசுகள் பறக்கின்ற புழுதி மண்ணில் நின்று
தலைக்கணத்தின் -
பெருமைகள் புகழ் பாடுகின்றன .
மனித நேயத்தை புதைத்து விட்டு
பொறாமை உணர்வுகள்
தங்கள் கண்களை தாமே மறைத்துக் கொண்டு விழிகளை தடவுகின்றன
ஒவ்வொரு சுமைகளையும் தூக்குகின்றேன்
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை !
வாழ்க்கையின் தத்துவம் படிப்பினையாகமாறிப் போகின்றது .
தூசுகள் பறக்கின்ற புழுதி மண்ணில் நின்று
தலைக்கணத்தின் -
பெருமைகள் புகழ் பாடுகின்றன .
மனித நேயத்தை புதைத்து விட்டு
பொறாமை உணர்வுகள்
தங்கள் கண்களை தாமே மறைத்துக் கொண்டு விழிகளை தடவுகின்றன
Saturday, May 3, 2014
கடைசி காட்சியில் கலக்கும் கதாநாயகி
கரப்பான் பூச்சிக்கு அடுத்ததாக எந்த பேரழிவையும் தாங்கி நிற்கும் சக்தி கொண்டது எலி. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உயிர் பிழைத்துக் கொள்ளும் அறிவு எலிக்கு உண்டு. சர்வைவல் இன்ஸ்டிங்க்ட். ஆனால், எதிர்பாராமல் ஒரு நில நடுக்கமோ, சுனாமி போன்ற வெள்ளப் பிரவாகமோ ஏற்படும்போது, அது என்னவென்று தெரியாத குழப்பத்தில் எலிகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடும்.
பிஜேபி தலைவர்களை அந்த எலிக் கூட்டத்தோடு ஒப்பிட்டு பேசிவிட்டார், பிரியங்கா காந்தி. மிரண்டோடும் எலிகள். அரசியலை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அழகான சொல் பிரயோகம். இலக்கிய ரசனை மிகுந்தவர்கள் நினைத்து நினைத்து சிலாகிக்கும் கற்பனைச் சித்திரம். பொதுவாக அரசியல்வாதிகள் இத்தகைய வர்ணனைகளை கடன் வாங்குவதுதான் வழக்கம். ஆனால், running like baffled rats என்ற பதத்தை சமீபத்தில் யாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை. அந்த வகையில் பிரியங்கா ஒரு கார்ட்டூனிஸ்ட் போல ஒரிஜினலாக சிந்திப்பவர் என்பது தெரிகிறது.
பிஜேபி தலைவர்களை அந்த எலிக் கூட்டத்தோடு ஒப்பிட்டு பேசிவிட்டார், பிரியங்கா காந்தி. மிரண்டோடும் எலிகள். அரசியலை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அழகான சொல் பிரயோகம். இலக்கிய ரசனை மிகுந்தவர்கள் நினைத்து நினைத்து சிலாகிக்கும் கற்பனைச் சித்திரம். பொதுவாக அரசியல்வாதிகள் இத்தகைய வர்ணனைகளை கடன் வாங்குவதுதான் வழக்கம். ஆனால், running like baffled rats என்ற பதத்தை சமீபத்தில் யாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை. அந்த வகையில் பிரியங்கா ஒரு கார்ட்டூனிஸ்ட் போல ஒரிஜினலாக சிந்திப்பவர் என்பது தெரிகிறது.
Friday, May 2, 2014
உந்தன் மழையை எங்களுக்கும் தந்து விடு
இறைவா நாங்கள் செய்த தவறை மன்னித்து
நிறைவாக உந்தன் அருளை தந்து விடு
நீ படைத்தவைகள்தான் அனைத்தும்
நீ தருபவைகள்தான் அனைத்தும்
எங்கள் பகுதியும் உன் பகுதிதான்
எங்கள் பகுதியில் இருப்பவைகள் அனைத்தும்
உந்தன் அருளால் உருவானவைகள்தான்
நாங்கள் மழை இல்லாமல் வாடுகின்றோம்
எங்களுக்காக படைக்கப்பட்ட செடி ,கோடி, ஆடு ,மாடுகள் இன்னபிறவைகளும்
மழை இல்லாமல் வாடுகின்றன
கோடை மழையில் நனையும் கோட்டாறு !யென
Abu Haashima Vaver மழையின் அருமையை அனுபவித்து
அருமையான கவிதை பாடுகின்றார்
அபூ ஹாஷிமா வாவர் அவர்கள் கோட்டாறில் பெய்யும் மழையையும்
அழகாக படம் பிடித்தும் போடுகின்றார்
எங்களை பொறாமை எண்ணம் கொண்டவர்களாக ஆக்கி விடாதே
உந்தன் அருளை நாடி உனைத் தொழுது நிற்கின்றோம்
உந்தன் மழையை எங்களுக்கும் தந்து விடு
முகம்மது அலி ஜின்னா Mohamed Ali
நிறைவாக உந்தன் அருளை தந்து விடு
நீ படைத்தவைகள்தான் அனைத்தும்
நீ தருபவைகள்தான் அனைத்தும்
எங்கள் பகுதியும் உன் பகுதிதான்
எங்கள் பகுதியில் இருப்பவைகள் அனைத்தும்
உந்தன் அருளால் உருவானவைகள்தான்
நாங்கள் மழை இல்லாமல் வாடுகின்றோம்
எங்களுக்காக படைக்கப்பட்ட செடி ,கோடி, ஆடு ,மாடுகள் இன்னபிறவைகளும்
மழை இல்லாமல் வாடுகின்றன
கோடை மழையில் நனையும் கோட்டாறு !யென
Abu Haashima Vaver மழையின் அருமையை அனுபவித்து
அருமையான கவிதை பாடுகின்றார்
அபூ ஹாஷிமா வாவர் அவர்கள் கோட்டாறில் பெய்யும் மழையையும்
அழகாக படம் பிடித்தும் போடுகின்றார்
எங்களை பொறாமை எண்ணம் கொண்டவர்களாக ஆக்கி விடாதே
உந்தன் அருளை நாடி உனைத் தொழுது நிற்கின்றோம்
உந்தன் மழையை எங்களுக்கும் தந்து விடு
முகம்மது அலி ஜின்னா Mohamed Ali
Thursday, May 1, 2014
ஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள்
ஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள்
---------------------------------------------------------
’ஓட்டு போடுவது அருமை; போடாதவன் எருமை’ என்று எஃப்.எம் ரேடியோவில் விளம்பர வாசகம் கேட்கும்போது ‘ஓவராக இருக்கிறதே’ என தோன்றியது. ஓட்டு சதவீதம் எத்தனை என்று தெரிந்தபோது, ‘எருமைக்கு பதில் வேறு எதோடு ஒப்பிட்டு இருந்தால் ரோஷம் வந்திருக்கும்?’ என்ற கேள்வி எழுந்தது.
தேர்தல் கமிஷனும் சரி, ஊடகங்களும் சரி, வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு தள்ளிவிட இயன்றதை எல்லாம் செய்தன. புனிதமான கடமை, உப்பு போட்டு சாப்பிடும் ஒவ்வொருவனும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும், ஓட்டு போடாதவன் இந்த நாட்டில் வாழ லாயக்கில்லாதவன்.. என்று பலவகையில் தூண்டிவிட்டன. ஆனாலும் தமிழகத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் 2009 தேர்தலில் பார்த்த அதே அளவுதான். வாய்கிழிய கத்தினாலும் 27 சதவீத மக்களை ஓட்டுப் போட வைக்க முடியவில்லை.
---------------------------------------------------------
’ஓட்டு போடுவது அருமை; போடாதவன் எருமை’ என்று எஃப்.எம் ரேடியோவில் விளம்பர வாசகம் கேட்கும்போது ‘ஓவராக இருக்கிறதே’ என தோன்றியது. ஓட்டு சதவீதம் எத்தனை என்று தெரிந்தபோது, ‘எருமைக்கு பதில் வேறு எதோடு ஒப்பிட்டு இருந்தால் ரோஷம் வந்திருக்கும்?’ என்ற கேள்வி எழுந்தது.
தேர்தல் கமிஷனும் சரி, ஊடகங்களும் சரி, வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு தள்ளிவிட இயன்றதை எல்லாம் செய்தன. புனிதமான கடமை, உப்பு போட்டு சாப்பிடும் ஒவ்வொருவனும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும், ஓட்டு போடாதவன் இந்த நாட்டில் வாழ லாயக்கில்லாதவன்.. என்று பலவகையில் தூண்டிவிட்டன. ஆனாலும் தமிழகத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் 2009 தேர்தலில் பார்த்த அதே அளவுதான். வாய்கிழிய கத்தினாலும் 27 சதவீத மக்களை ஓட்டுப் போட வைக்க முடியவில்லை.
Subscribe to:
Posts (Atom)







