இன்று:
வாட்ட சாட்டமுகம்
வகையான கம்பீரம்
இனிய பேச்சு
எப்போதும் புன்சிரிப்பு
தூய வெண்ணுடை
தீட்சண்யமிகு பார்வை
கறுப்புத் தாடி
காய்த்துப் போனநெற்றி
பார்ப்போரை ஈர்க்கும்
பக்திப் பரவசமே!
பலவாறாய் சிரமப்
பட்டநம்ம முத்தலிபு
சில வருஷ மாக
சிரமமின்றி வாழ்கிறார்!
வீட்டைப் புதுப்பித்தார்
வயலிரண்டை வாங்கிப் போட்டார்.
வங்கியில் பணம் சேர்த்தார்
வாகனமும் வாங்கிவிட்டார்
என்ன தொழிலென்று
யாருக்கும் தெரியாது
எப்படி வசதி என்று
யூகிக்கவும் முடியாது
எளிதான தொழிலொன்று
இருக்கிறது என்றஉண்மை
இவருக்கே தெரியாது!
அதுஒரு தனிக்கதைதான்!
ஒருநாள் அவர் நண்பர்
உமருடன் இருக்கையிலே
பெரியார் ஒருவர்
பணிவாய் வந்துநின்றார்!
கையில் ஒருநோட்டு
கறுப்புநிற சூட்கேஸ¤
நேயமுடன் நோக்கினார்
நோட்டை நீட்டினார்.
வாங்கிப் படித்தஉமர்
வீட்டுக்குள் சென்றுவந்தார்
பத்து ரூபாயை
பரிவுடனே கொடுத்திட்டார்!
பெரிதாய் சலாம்சொல்லி
பெரியவரும் சென்றுவிட்டார்.
Showing posts with label வறுமை. Show all posts
Showing posts with label வறுமை. Show all posts
Wednesday, February 5, 2014
Friday, November 29, 2013
தேடியதில் கிடைத்த முத்து
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை
உன்னை பார்க்கும் வரை!
முற்றிய வலியிலும்
வற்றிய மார்பினில்
தாயின் சேலையில் தொங்கும்
சிதைந்த முடியுடனும்
சிந்தாத மூக்குடனும் ஏங்கும்
குழந்தையே...
காற்றால் மட்டும் நிரப்பப்பட்ட
உன் பால் பாட்டிலை
பார்க்கும் வரை!
பிச்சைப்போடுவதில் உடன்பாடில்லை!
சிறப்பாக வாழ்ந்தாளோ
சீரழிந்து போனாளோ
கற்போடு இருந்தாளோ இல்லாத
கற்பையும் இழந்தும் போனாளோ
உன் தாய்!
Wednesday, October 9, 2013
வறுமை அலையை எதிர்த்து நில்லு
காலத்தின் கோலமென
காலமதை குறை கூறி
காரிரினுள் வாழ்ந்து வரும்
சோம்பேறி மனிதர்கள் வைத்த
சாம்ராஜ்யம் அழிக்கும் பெயராம்
வறுமை
இறைதந்த கரம் இருக்க
இயங்கி நடக்க கால் இருக்க
உழைப்பெனும் ஏணியை
உயரப்பிடிக்காதது ஏனோ
நீ உதிர்ந்திருப்பது
உன் குற்றம் தானோ
இயலாமை மனப்பான்மை
ஒருபோதும் கொள்ளாதே
முயலாமை உன் வாழ்வை
முடக்கிடுமே எந்நாளும்
மதிநிறைய மடமை சுமந்து
விதியென்று வேசமிட்டு
கெதியென்று முடங்கிக்கிடந்து
நீயும் மடிந்திடலாகுமோ
மனம் தனிலே
சோர்வு கொள்ளலாகுமோ
துணிவாய் துடிப்பாய் எழுந்து நில்லு
துன்பமதனை கடந்து செல்லு
கனிவாய் மலர உரைத்திட்டு
காற்றாய் நீயும் பறந்திடுவாய்
வனப்பாய் நீயும் வாழ்ந்திடவே
வறுமை நோயை ஒழித்து விடு
Subscribe to:
Posts (Atom)

