Showing posts with label உழைப்பெனும் ஏணி. Show all posts
Showing posts with label உழைப்பெனும் ஏணி. Show all posts
Wednesday, October 9, 2013
வறுமை அலையை எதிர்த்து நில்லு
காலத்தின் கோலமென
காலமதை குறை கூறி
காரிரினுள் வாழ்ந்து வரும்
சோம்பேறி மனிதர்கள் வைத்த
சாம்ராஜ்யம் அழிக்கும் பெயராம்
வறுமை
இறைதந்த கரம் இருக்க
இயங்கி நடக்க கால் இருக்க
உழைப்பெனும் ஏணியை
உயரப்பிடிக்காதது ஏனோ
நீ உதிர்ந்திருப்பது
உன் குற்றம் தானோ
இயலாமை மனப்பான்மை
ஒருபோதும் கொள்ளாதே
முயலாமை உன் வாழ்வை
முடக்கிடுமே எந்நாளும்
மதிநிறைய மடமை சுமந்து
விதியென்று வேசமிட்டு
கெதியென்று முடங்கிக்கிடந்து
நீயும் மடிந்திடலாகுமோ
மனம் தனிலே
சோர்வு கொள்ளலாகுமோ
துணிவாய் துடிப்பாய் எழுந்து நில்லு
துன்பமதனை கடந்து செல்லு
கனிவாய் மலர உரைத்திட்டு
காற்றாய் நீயும் பறந்திடுவாய்
வனப்பாய் நீயும் வாழ்ந்திடவே
வறுமை நோயை ஒழித்து விடு
Subscribe to:
Posts (Atom)
