Showing posts with label நெஞ்சு. Show all posts
Showing posts with label நெஞ்சு. Show all posts

Thursday, February 20, 2014

வண்ணப் பெண்புறாவை சின்னப் புறாக்கள் மொய்த்தும்....



வண்ணப் பெண்புறாவை
சின்னப் புறாக்கள் மொய்த்தும்
ஈயாடவில்லை
ஏக்கம்கொண்ட விழிகளில்
ஏனெனில்
ஏந்திலையின் நெஞ்சுக்குள்
ஏகந்தத்தின் நினைவுகள்
சூழ்ந்து சூரையாடிக்கொண்டிருந்தன
சுகந்தத்தின் கண்விழித்த
சொப்பனத்தில்
சொல்லடி என்னவென்று
செல்லக்கிளியே-உனை
சொக்கவைத்தது யாரென்று...

ஏறெடுத்துப் பார்க்கும் பார்வையில்
எட்டடுக்கு கேள்விகள்,
தொடுக்கிறாள் இவள்
துள்ளித் துவழ்கிறான் அவன்.

Wednesday, November 27, 2013

பொழுதுகளின் எல்லையற்ற நீட்சிகளில் ...











பொழுதுகளின்
எல்லையற்ற நீட்சிகளில்
நீந்திச் செல்லும்
எண்ணற்ற காட்சிகளிலும்
வந்து வந்து
கலைந்து செல்கிறது
அது !

குதூகலிக்கும் தருணங்களிலும்
கூடிக்கூடி குலாவி
கும்மாளமிடும்
குடும்ப சங்கமங்களிலும்
எங்கோ ஒரு மூலையில்
ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது
அது !