Showing posts with label நடராசன். Show all posts
Showing posts with label நடராசன். Show all posts

Saturday, August 23, 2014

ஆயிஷாவின் அப்பா!

நான்கு ஆண்டுகளுக்கு முன் மகள் 4ம் வகுப்பு படிக்கும் போது, ஒருநாள், தமிழாசிரியை தன்னுடன் மிகவும் கடினமாக நடந்து கொள்வதாக புகாருடன் வந்தாள். சரி நான் வந்து பேசுகிறேன் என்று சொல்லி சமாதானப்படுத்திவிட்டு மறந்துவிட்டேன்.

அடுத்த ஓரிரு நாள்களில் சில குழந்தையிலக்கியம் புத்தகங்கள் வாங்குவதற்காக பாரதி புத்தகாலயம் (தேனாம்பேட்டை) போயிருந்தேன்.

அப்போது நிலையத்தின் மேலாளர் Mohammed Sirajudeen 'ஆயிஷா’ என்ற புத்தகத்தைக் கொடுத்து படித்துப் பாருங்கள் என்றார். அங்கேயே அந்தப் புத்தகத்தை படித்து முடித்தேன். என் கண்கள் கலங்குவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே என் நினைவுக்கு வந்தவர் என் மகளின் ஆசிரியை. அவருக்கு இந்தப் புத்தகத்தை படிக்கக் கொடுக்கவேண்டும் என்று தோன்ற, இரண்டு புத்தகங்களாக வாங்கினேன்.