Showing posts with label தீவிரவாதி. Show all posts
Showing posts with label தீவிரவாதி. Show all posts

Tuesday, January 8, 2013

அனைத்தையும் அறிவேன்! அடுத்தவனை அறியேன்!

கல்யாணராமன் வேலைத் தேடி ஒரு அலுவலகத்திற்கு போகிறார். அங்கு பேட்டி காண்பவர்கள்  கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றனர். அங்கே கேட்ட கேள்வியும் கல்யாணராமன் சொன்ன பதிலும் மற்றும் அவருக்கு வேலைத் தருவதற்கு இறுதியாக கொடுத்த விவரமும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

உன் பெயர் ?
கல்யாணராமன்
உன் தந்தையின் பெயர்?
கல்யாணம்.
உன் தாயின்  பெயர்?
சீதா தேவி.
உன் பெயரில்  உன் தந்தை  பெயர் சேர்ந்துள்ளதே!
அது நாங்கள் தொடர்ந்து செய்வது.
ஏன் உங்கள் தாயின் பெயரை சேர்ப்பதில்லையா!
பழக்கமில்லை .பெண்ணாயிருந்தால் கணவன் பெயரில் சேர்த்துக் கொள்வார்கள்.
ஓகோ!  பெண்ணாயிருந்தால் பெயரில் கூட தனித்து நிற்க முடியாதோ!
அப்படியில்லை. இது தொடர்ந்து வரும் பழக்கம்.
நீ என்ன படித்திருக்கிறாய்? முன்  வேலைப் பார்த்த அனுபவம் உண்டா ?
நான் கணினி பொறியாளர்  படிப்பு படித்துள்ளேன். மதிப்பெண்களும் அதிகம் வாங்கி உள்ளேன் அனால் வேலைப் பார்த்த அனுபவமில்லை,

மற்ற அனுபவங்கள் மற்றும் பொது அறிவைப் பற்றி பேட்டி தொடர்கிறது..

Sunday, May 8, 2011

பின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி

ஒழிக்கப்படவேண்டியது தீவிரவாதம்தான் .தீவிரவாதி அல்ல .பின்லேடன்  ஏன்?   தீவிரவாதியானான் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் .உலக ரவுடியான அமரிக்கப் படை எங்கு சென்றாலும் ,எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் வெளிய வருவது இல்லை . .வியாட்னாமிலும்அமரிக்கப் படை இன்னும் உள்ளது .ஆப்கானிஷ்தானிலும்,ஈராக்கிலும் அமரிக்கப் படை இன்னும் உள்ளது . அமரிக்கப் படையின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் மாண்டு உள்ளனர் .அணு ஆயுதம் வைத்துள்ளார் என்று சதாமைக் கொன்றார்கள் .கடைசிவரை  அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடு என்பதற்காக எதுவும்  செய்யலாம் என்பது தவறு .தவறு யார்? செய்தாலும் தவறுதான் .சில ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான பின்லேடனைக் கொன்றார்கள் .ஆனால் சில லட்சம் பேர் சாவுக்கு காரணமான ராஜபட்சேயை கொல்ல அமெரிக்க முன் வருமா ?வராது .காரணம் அமெரிக்காவில் இறந்தது அமெரிக்கர் .இலங்கையில் இறந்தது தமிழர் .ஏன் ? இந்தப் பாகுபாடு .இலங்கையில் பெட்ரோல் கிணறுகள் இல்லை பின்லேடன் படுகொலையோடு இது முடிந்துவிடுமா? யோசிக்க் வேண்டும் ?பின்லேடன்  ஆதரவாளர்கள் இருப்பார்கள் அவர்களை மூளைச் சலவை செய்து வன்முறைக்கு வழி வகுப்பார்கள். அமெரிக்காவின் இந்த பலி வாங்கும் செயலால் உலக அமைதி கேள்விக் குறியானது .