Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Monday, September 9, 2013

மூடநம்பிக்கை என்றால் என்ன !

'மூடநம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு கருணாநிதி வலியுறுத்தல்' - செய்தி .

ஒரு சட்டம் இயற்ற பல விதிகள் உண்டு .
மூடநம்பிக்கை என்றால் என்ன !
எது! எது ? மூடநம்பிக்கையில் வரும்

ஒரு செயல் நடைபெற ஒரு காரியம் உண்டு
ஒரு காரியம் நடைபெற காரணகர்த்தா யார்
ஒரு வினைக்கு எதிர் வினை உண்டு
வினையை உருவாக்கியவன் யார் !
இயற்கையாக நிகழ்ந்தது என்றால் அந்த இயற்கையை உருவாக்கியவன் யார்
இயற்கை இயற்கையாக நிகழ்ந்ததா !
இயற்கையின் விளக்கம் என்ன?
கருவில்லாமல் உருவில்லை
இருக்கும் கருவை உருவாக்கியவர் யார்

Tuesday, January 8, 2013

அனைத்தையும் அறிவேன்! அடுத்தவனை அறியேன்!

கல்யாணராமன் வேலைத் தேடி ஒரு அலுவலகத்திற்கு போகிறார். அங்கு பேட்டி காண்பவர்கள்  கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றனர். அங்கே கேட்ட கேள்வியும் கல்யாணராமன் சொன்ன பதிலும் மற்றும் அவருக்கு வேலைத் தருவதற்கு இறுதியாக கொடுத்த விவரமும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

உன் பெயர் ?
கல்யாணராமன்
உன் தந்தையின் பெயர்?
கல்யாணம்.
உன் தாயின்  பெயர்?
சீதா தேவி.
உன் பெயரில்  உன் தந்தை  பெயர் சேர்ந்துள்ளதே!
அது நாங்கள் தொடர்ந்து செய்வது.
ஏன் உங்கள் தாயின் பெயரை சேர்ப்பதில்லையா!
பழக்கமில்லை .பெண்ணாயிருந்தால் கணவன் பெயரில் சேர்த்துக் கொள்வார்கள்.
ஓகோ!  பெண்ணாயிருந்தால் பெயரில் கூட தனித்து நிற்க முடியாதோ!
அப்படியில்லை. இது தொடர்ந்து வரும் பழக்கம்.
நீ என்ன படித்திருக்கிறாய்? முன்  வேலைப் பார்த்த அனுபவம் உண்டா ?
நான் கணினி பொறியாளர்  படிப்பு படித்துள்ளேன். மதிப்பெண்களும் அதிகம் வாங்கி உள்ளேன் அனால் வேலைப் பார்த்த அனுபவமில்லை,

மற்ற அனுபவங்கள் மற்றும் பொது அறிவைப் பற்றி பேட்டி தொடர்கிறது..

Wednesday, May 11, 2011

பின்லேடன் மனைவிகளை அமெரிக்கா சந்திக்க பாக். அனுமதி

பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் வைத்து பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றதாக அறிவித்தையடுத்து, பாகிஸ்தான் அரசு தான் அவரை பாதுகாத்து வந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  காரணம் பின்லேடனை தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடம்  ராணுவ பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ளதால் ராணுவத்திற்கு தெரியாமல் பின்லேடன் தங்கியிருக்க முடியாது என்ற விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில்,  பின்லேடனின் மனைவிமார்கள் 3 பேரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து பத்திரமாக பாதுகாத்து வருகிறது என்ற செய்தி வெளியானது.  எனவே, பாக்கிஸ்தான் பின்லேடனின் மறைவிடம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், கைது செய்து வைத்திருக்கும் அவரது மனைவிமார்களிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்க வலியுறுத்தியது.  இதற்கு ஆரம்பத்தில் மறுத்த பாகிஸ்தான், அமெரிக்காவின் தொடர் வற்புறுத்தலால் இப்போது சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.


ஆனாலும், அவர்களிடம் பேட்டி மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் கேள்விகளை கேட்டு அவர்களை விசாரணை நடத்த அனுமதிக்க இயலாது எனவும் கூறியுள்ளது.   இவ்விசயத்தில் பாகிஸ்தானின் பிடிவாதம் தொடருமா அல்லது தளருமா என்பது விரைவில் தெரியவரலாம்
Source : http://www.inneram.com/2011051116395/pak-permitted-to-see-binledans-wifes