Showing posts with label தமிழறிஞர்கள். Show all posts
Showing posts with label தமிழறிஞர்கள். Show all posts

Wednesday, November 10, 2010

வணங்காமுடி பதில்கள் (07-11-2010)





காஞ்சி சங்கராச்சாரியார் மீதான கொலை வழக்கு தற்போது எந்நிலையில் உள்ளது? - ஜோஸஃப், முளகுமூடு.

குற்ற வழக்குகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

ஆரம்ப வேகம் இருக்காது; ஆரம்ப விளம்பரமும் கிடைக்காது.

நம் நாட்டு நீதிமன்றங்களின் நடைமுறைபற்றி வ.மு விடைப்பகுதியில் முன்னர் விளக்கப்பட்டுளதே?.

நித்தி வழக்குத் தொடர்பாக இதுபோன்ற ஒரு வினாவுக்கு முன்னர் அளிக்கப்பட்டுள்ள விடையையும் பார்க்கவும். 

இங்கிலாந்திடம் அடிமைபட்டுக்கிடந்த நாடுகள் கலந்து கொள்ளும் பொதுநலவாய போட்டிகளில் அடிமையாக இருந்த அமெரிக்கா கலந்து கொள்வதில்லையே? - முகிலன், துபை.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இங்கிலாந்து நுழைந்து, அவற்றை அடிமைப் படுத்தியது  போல அமெரிக்காவில் நுழைந்து அவர்களை அடிமைப் படுத்தவில்லை என்பது ஒரு புறமிருக்க, அமெரிக்கா இப்போது உலகின் ஸூப்பர் பவர். இங்கிலாந்து கூட அமெரிக்கா செல்லும் வழியில்தான் செல்ல வேண்டும். அதனால் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், அங்கிள்ஸாம்' கலந்து கொள்ளாமல் இருக்கலாம். அவருக்கு இந்த விளையாட்டுகளை விட மிகவும் பிடித்தது இராக், ஆப்கான் விளையாட்டுகள்தாம். அங்கிள்ஸாம்  அடுத்ததாக ஈரான் விளையாட்டுக்கு ஆயத்தப்படுகிறார்.


மனிதன் கேட்ட முதல் கேள்வி எதுவாக இருக்கும்? - சந்தியா-திருச்சி.

யாரிடம்?


கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளதே. அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு காங்கிரசுக்கு உள்ளதா? - ராஜ்மோகன், கோவை.கேரளச் சட்டசபைத் தேர்தல் வரலாற்றைப் பார்த்தால் ஐந்தாண்டுகளுக்குக் காங்கிரஸ் முன்னணி, அடுத்த ஐந்தாண்டுகளுக்குக் கம்யூனிஸ்ட் முன்னணி என மாறி மாறி இரு முன்னணிகளுக்கும் கேரள மக்கள் சம வாய்ப்பளித்து வந்துள்ளதைக் காணலாம்.

இப்போது வந்துள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மட்டுமின்றிக் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் கம்யூனிஸ்ட் முன்னணிக்கு எதிராகவே அமைந்திருந்ததை வைத்துப் பார்க்கும்போது வரலாறு அதன் வழியே நடைபோடும் என அனுமானிக்கத் தோன்றுகிறது.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிக செலவு வைக்கும் சில நோய்களுக்கு இடமில்லையாமே. பின்னர் எதுக்கு இந்த திட்டம்?  - முனியப்பன், முக்கூடல்.
தானம் கிடைத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இப்போது உள்ள இந்தத் திட்டம்,  பொதுவாக அடிக்கடி வரும் நோய்களுக்கானது;. ரூபாய் ஓரிலட்சம் வரை செலவு பிடிக்கும் சிகிச்சைக்கு அரசு உதவும் இத்திட்டத்தை, "ஏன் இந்தத் திட்டம்" என உதாசீனப்படுத்துவது அறிவுடைமை ஆகாது.

கலைஞர் காப்பீட்டு திட்டம் குறித்து முன்னர் அளித்த பதிலையும் காண்க.

பல மத அடையாளங்களில் காட்சித்தரும் அதிபர் ஓபாமா உண்மையில் யார் கிறிஸ்தவரா, யூதரா, முஸ்லீமா அல்லது லூசிஃபரை(சைத்தான்)
வணங்குபவரா?
- செபாஸ்டீன், சென்னை.
முன்னர் இதுபோன்ற ஒரு வினாவுக்குக் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி விடை அளிக்கப்பட்டுள்ளது.

தாம் கிருத்துவன் என ஒபாமாவே சொன்ன பிறகு மற்றவர்கள் அதைத்தூண்டித் துருவி ஆராயத் தேவையென்ன?

அவரது மதம் அமெரிக்க அதிபர் பதவியின்  அதிகாரத்தில் எவ்வித ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்துவதில்லை எனும்போது உங்களுக்கு அதில் ஏன் இவ்வளவு அக்கறை?

காஷ்மீர் மக்கள்  விரும்புவது இந்தியாவையா அல்லது பாகிஸ்தானையா அல்லது தனி நாடாக பிரிந்து போகவா? - அம்பிளி, பரைக்கோடு.

காஷ்மீரைப் பாகிஸ்தான் விரும்புகிறது; இந்தியாவும் விரும்புகிறது.

அதனால்தானே இரு நாடுகளும் குட்டி காஷ்மீரைப் பங்கு போட்டுள்ளன?