Showing posts with label சந்தேகம். Show all posts
Showing posts with label சந்தேகம். Show all posts

Monday, December 30, 2013

எதிலும் சந்தேகமும் பயமும் "வஸ்வாசி"

நம்பிக்கையற்ற நிலை 
நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்
(கற்பனை கோளாறுகள் )

சுத்தம்

சுத்தமாக இருப்பதில் கடுமை
சுத்தமாக இருக்கிறதா என்பதில் உன்னிப்பாக கவனித்தல்
சுத்தம் சீரான முறையில் கையாளப் பட்டதா என்பதில் கவனம்

தன்னிலை வேலையில் சந்தேகம்

வீட்டின் கதவு சரியாக பூட்டப் பட்டாதா
கையை முறையாக கழுகாமல் விட்டு விட்டேனா
ஆயத்தத்தில் எதையாவது தவற விட்டு விட்டேனா
இறை வணக்கத்தில் தவறு நிகழ்ந்து விட்டதா

Sunday, September 15, 2013

சந்தேகம் ஒரு பக்கம் வீசும் காற்றா!

அன்பே! என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்

ஒன்றுமில்லை ஆறுயிரே !

உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன் எனைவிடுத்து நான் வரும்போதெல்லாம் லாப்டாப்பில்தானே உலா வருகிறாய்

'ஓ' நீங்கள் வேறு ஏதோ மனதில் கொண்டு பேசுவதென்ன!

நான் என்ன அவ்வளவு அறியாதவனா ! உன்னை பல நாட்களாக பார்க்கிறேன் . உன் செயல்பாடை, உன்னை சிறு வயதிலிருந்து நான் அறிவேன் . நீ லாப்டாப்பில்தானே எந்த நேரமும் மூழ்கிக் கிடக்கிறாய்!

நான் பார்க்கும் தொழில் சம்பந்தமாக சிலவற்றை தேடியே இந்த வேலையில் ஈடுபட்டுள்ளேன் என்று நான் உங்களிடம் பல முறை சொல்லியுள்ளேன்

இல்லை! நான் நீ செய்வதை பார்க்க வேண்டும்.

நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இத்தனை காலங்கள் நீங்கள் காட்டிய காதலும் ,பாசமும் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் எவ்வாறு மறைந்து போனது

அன்பே!எனது பிரியமானவளே! உன் மீது நான் கொண்ட காதலும் ,பாசமும் உயர்வானது . வருத்தம் கொள்ளாதே. நான் வரும்போது உன் நினைவோடிருக்க நீ மற்றொன்றில் கவனம் செலுத்துவது என் மனம் தாங்கிக் கொள்ள முடியாமல் துடிக்கிறது