Showing posts with label கவிக்கோ. Show all posts
Showing posts with label கவிக்கோ. Show all posts

Monday, October 26, 2015

துளி நீரும் நீ! பெருங் கடலும் நீ!!

மதுரையில் பிறந்த
மதுரம் நீ.
அதன் சாரம்,
புதுகையில் இருந்து
ஊற்றெடுத்தது- என்பதே
உன் பூர்வீகம்.

தமிழ்த்தாயின்
மனம் பெரிது-
உன் மனம் போல.
எனவே,
உர்தூ குடும்பத்து
உதயத்தை,
தமிழ்த்தாய்
தனதாக்கிக் கொண்டாள்.

வைகைக் கரையில் தொடக்கம்
வையகக் கரையெங்கும் தமிழ் முழக்கம்.