அது
ஒரு நூல்
அந்த
அற்புத நூல்
உன் கைகளில்
உனக்கும்
அந்த நூலுக்கும்
விட்டுப் பிரிவதியலாத்
தொடர்பு
ஆனால்
பரிதாப ஆச்சரியம்
யாதெனிலோ
அந்த நூல் பற்றி
ஏதும் தெரியாது
உனக்கு
வெறுமனே
அதை வாசித்தாலே
நன்மைகள் கோடி என்ற
பிழையான நினைப்புதான்
உனக்கு
நீ கற்றவன்
ஆனால் அந்த நூலை
நீ கற்றதில்லை