Showing posts with label அருளப்பட்ட நூல். Show all posts
Showing posts with label அருளப்பட்ட நூல். Show all posts

Monday, September 3, 2012

அது ஒரு நூல்


அது
ஒரு நூல்

அந்த
அற்புத நூல்
உன் கைகளில்

உனக்கும்
அந்த நூலுக்கும்
விட்டுப் பிரிவதியலாத்
தொடர்பு

ஆனால்
பரிதாப ஆச்சரியம்
யாதெனிலோ
அந்த நூல் பற்றி
ஏதும் தெரியாது
உனக்கு

வெறுமனே
அதை வாசித்தாலே
நன்மைகள் கோடி என்ற
பிழையான நினைப்புதான்
உனக்கு

நீ கற்றவன்
ஆனால் அந்த நூலை
நீ கற்றதில்லை