Showing posts with label கடமை. Show all posts
Showing posts with label கடமை. Show all posts

Thursday, December 12, 2013

உங்களுக்கு கொடுக்கப்பட்ட செலுத்த வேண்டிய தொகைக்கான ரசீது கிடைத்ததா?

 எழுபது வயதை கடந்த மனிதர் சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டு அதன் நிமித்தமாக நோயால் பாதிக்கப்பட்டார். அவரை ஒரு திறமையான மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர் மருத்துவர்கள் அவரை பல வகையில் சோதித்து அவருக்கு அவசரமாக  ஒரு அறுவை சிகிச்சை தேவை என்று அந்த மருத்துவர் ஆலோசனை கூறினார். அவர் பல நாட்கள்   கடுமையான வலியால் அவதிப்பட்டதால் அவர் உடனேயே  அறுவை சிகிச்சை செய்ய ஒப்பு கொண்டார்.

Sunday, December 16, 2012

கற்பனையில் காலம் போய் விடும்

நன்மையை ஏவு தீமையைத் தடு
சமூகச் சீர்திருத்தத்தை செய் 
கடமை காத்திருக்க நழுவுவதேன்
பணி  செய்வதே நம் கடமை
செயலின் எல்லையை விரிவாக்கிக் கொள்
சேவையின் சொல்லை   நயமாக்கிக் கொள்
நோக்கம் நன்மையாகி சேவை விரியட்டும்
தனி மரம் தோப்பாகாது
தனி  மனிதன் சமூகமாக முடியாது
நாம் நிம்மதியடைய சமூகம் வேண்டும்
சமூகத்தின் நிம்மதியில் நமக்கும் பங்குண்டு
சமூகம் நமக்கு என்ன செய்தது என நினையாமல்
சமூகத்திர்க்கு நாம் அளித்த பங்கென்ன நினைத்தல் உயர்வு
சமூகத்தில்  நம் சேவையும் தேவை
சிறு துளி பெரு வெள்ளமாகும்
நாமும் அதில் ஒரு துளி

தடுக்கி விடும் கல்லை ஓரத்தில் நகர்த்துவதும்
தடுக்கி விடும் கல்லை போடவருபவரை நிறுத்துவதும்
தர்மச் சேவையில் அடங்கும்
ஆரம்பம் நம்மிடத்தில் தொடரட்டும்
மேன்மை பெரிதாக பரவட்டும்
சொலவதை சொல்
செய்வதை சொல் 
சொல்வதும் செய்வதும் நன்மை பயக்கட்டும்

ஆலோசனை அறிவாக இருக்கட்டும்
அறிவு உயர்வாக இருக்கட்டும்
மனதே சொல்லும் மேன்மையை
மனது மேன்மையடைய மார்க்கத்தை நாடு
பானையில் உள்ளதே அகப்பையில் வரும்
அறிவில்  உள்ளதே வெளியில் வரும் 
அறிவைப் பெருக்க அறிர்களை நாடு
நாடியவர்களிடம் நன்மையைப் பெறுவாய்
சிந்தி ஆழமாக சிந்தி
சிந்தித்ததை சிதறவிடாதே
சிந்தித்ததை கோர்வையாக்கி மாலையாக்கு
மாலையைப் பெற்றவர் மகிழ்வடைவர்

கற்பனையில் காலம் போய் விடும்
செயலில் காலம் சிறந்துவிடும்
மேம்படுத்தும் செயல் மேன்மை பெற்று விடும்
பொல்லாங்குப்  பிரச்னை தூளாகி விடும்
உனக்குள் ஒரு ஒளி ஒலிந்திருக்கிறது
ஒலிந்ததை வெளிக் கொணர்ந்து ஒளிமயமாக்கி விடு
ஒளி உனக்கும்  மற்றவருக்கும் வழி காட்டும்

Monday, November 12, 2012

ஞானம் பெறுவது தலையாய கடமை

  இஸ்லாத்தைப் பற்றி, அப்புனித மதத்தின் தீர்க்கதரிசி முஹம்மது நபி அவர்களைப் பற்றி, பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனும் திறம் பெற்றிருக்க வேண்டும்.  மற்ற மத நண்பர்களோ நம் மதத்திலேயே நமது நாகரிகம், கலை, பண்பாடு முதலியவற்றை அறியாத பாமர மக்களோ நம்மிடம் விளக்கம் கேட்கும் போது கொஞ்சமும் தயங்காது விரிவுரை தருவதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இதற்குப்பல வழிகள் இருக்கின்றன.
பொதுவாக ஒவ்டிவாரு முஸ்லிம் கிராமத்திலும் சங்கங்கள் இயங்கிவருகின்றன.  திருமண வைபவங்களில் கலந்து பணியாற்றுவதையே பிரதானக் கடமையாக அவைகள் கருதுகின்றன.  அப்படி இல்லாது இன்னும் பல பணிகளில் அவைகள் ஈடுபட வேண்டும்.

Tuesday, August 14, 2012

எது சுதந்திரம் ?

எது சுதந்திரம் ?
நல்ல நாள் கெட்ட நாள் என்பது  கிடையாது .வாழும் நாள் அனைத்தும் உயர்வான நாட்கள்தான்.
அழுக்கு சேர அதனை நீக்க முயல்கின்றோம் மனதில் அழுக்கு சேர நல்லவைகளை  கேட்டும், படித்தும்  மனதில்  படிந்த அழுக்கை அகற்ற முயல வேண்டும் . இவை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் தொடர் முயற்சி  தேவை. நீண்ட நேரம் இறைவனை வணங்கி சோர்வு அடைவதை விட தொடர்ந்த தொழுகை வாழ்கையை பண்படுத்தும்
நல்லதை செய் அதை இன்றே செய் .
வாழு, வாழ விடு
இன்று உனக்கு தேவைப் படாதது நாளை அது அவசியமாகிவிடலாம் .
விரயம் செய்வதைக் காட்டிலும் தர்மம்  செய்து நன்மையை அடைந்துக் கொள் .
பிறக்கும்போது சுதந்திரமாக பிறந்தாய் பின் அன்பினால் பிணைக்கப் பட்டாய்.
உன் சுதந்திரம் மற்றவருக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்
கொடை பிடிக்க உனக்கு உரிமை உண்டு ஆனால் அந்த குடை மற்றவர் மூக்கில் குத்தாமல் இருக்கும் வரைதான் உனக்கு சுதந்திர  உரிமை கொடுக்கப் பட்டுள்ளது. கடமையை செய்யாதவனுக்கு உரிமை கிடையாது. 

கொண்டாட்டங்கள் உற்சாகப் படுத்துவதாக இருக்க வேண்டும் .அதுவே உபத்திரவம் தருவதாக இருந்தால் உனக்கு பக்குவம் வருவதற்கு முன்பே கொடுக்கப் பட்ட சுதந்திரம் என நினைக்க முற்பட்டு அதனால் உன் சுதந்திரம் பறிக்கப் பட்டுவிடும்.
உலகம் சுற்றுவதுபோல்தான் அரசியல் வாழ்வும் .அது மாறி, மாறி வரும் . தனி மனிதனது  ஆட்சி கொடுமையானால் அதனை மக்கள் எடுத்துக் கொள்வர் . மக்களும் மாக்களாக மாற அராஜகம் செய்ய முற்படும் பொது திரும்பவும் அடக்கு முறை பயன்படுத்தப் பட்டு ஆட்சி மாறும் . முடியாட்சி ,பிரபுக்கள் ஆட்சி , கொடுங்கோலன் ஆட்சி பின்பு மக்களாட்சி .இந்த சுழலும் முறைதான் சரித்திரம் . நமக்கு கிடைத்த சிறந்த சுதந்திரத்தினை (நம் நலம் கருதி சில கட்டுப் பாடுகளுடன் அமையப் பெற்றதனை) இழந்து விடாமல் பார்த்துக் கொள்வது அனைத்து மனிதனின் கடமை . நம் கையில்தான் அது உள்ளது .அதனை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது நம் கடமை .
தவறு செய்யாமல் இருப்பதும் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதும்தான் உண்மையான சுதந்திரத்தின் மாண்பு.தவறு நடக்கும் போது ஒதுங்கிப் போனால் உன் சுதந்திரம் பறிபோகி விடும்.
ஓட்டுரிமை அனைவருக்கும் உண்டு . படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடில்லை. நமக்கு சமைக்க தெரியாது ஆனால் சமைத்த உணவை சுவைக்கத் தெரியும். ஆள்பவர் ஆட்சி நற்பயன் கொடுக்கவில்லையென்றால் நாம் பட்ட துயரமும் துன்பமும் அறிவோம் .இதனை அறிய படிப்பு மட்டும் அவசியமில்லை. அதனால் தான் அனைவருக்கும் உரிமை வழங்கப் பட்டுள்ளது . கால ஓட்டத்தில் அடக்கு முறையில் வாடிய மக்களும் கல்வியைப் பெற்றிடுவர். படித்தவன் தவறை பாதுகாவலோடு செய்வான் , (இன்று நடக்கும் பெரிய தவறுகள் அனைத்தும் கற்றோர்கள்
செய்தவைகளாகவே உள்ளன .மனது  பண்பட வேண்டும் . வழிகாட்டி உயர்வோராக இருக்க வேண்டும் .தலைவன் வழியே மக்கள் வழியாக மாறி விடுகின்றது)
இறைவா! நீ மக்களுக்கு நல் வழி காட்டி விட்டாய்.  நாங்கள் தவறு செய்து விட்டோம். நீ மன்னிப்பவன் மற்றும் மன்னிப்பை விரும்புபவன் நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து விடு . இனி உன் வழியிலேயே உயர்வான நற்காரியங்கள் செய்து நன்மையை அள்ளிக் குவிகின்றோம் அதற்க்கு உன் அருளை நாடி நிற்கின்றோம்.   உன்னிடமே பாதுகாவல் தேடுகின்றேன்.