Showing posts with label உகாண்டா. Show all posts
Showing posts with label உகாண்டா. Show all posts
Sunday, September 13, 2015
நான் காணும் உகாண்டா ....!
by- ராஜா வாவுபிள்ளை
ஆங்கிலேயர் சந்தித்த முதல் கபாகா.
நாடு பிடிக்கும் உக்தியோடு உகாண்டாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் கண்ட முதல் கபாகா முட்டேசா-1 என்ற புகாண்டா ராஜ வம்சத்து 30 வது கபாகா ஆவார்.
கபாகாவாக இருந்த இவரது தந்தை வைசூரி நோய்கண்டு இறந்ததும் 1856 ம் ஆண்டு முடிசூடிக் கொண்டார்.
பல வகையான முன்னேற்றங்களும் இப்போது இருக்கும் நாகரீக பகாண்டா பண்பாடு கலாசார வளர்சிகள் இவரது காலத்திலேதான் முடுக்கி விடப்பட்டது எனலாம்.
இதற்கு முந்தய கபாக்காக்கள் விலங்கினங்களிடம் இருந்தும் எதிரி நாட்டு படையெடுப்புகள் போன்றவற்றை கவனித்து வந்தார்கள் ஆனால் இவருக்கோ மண்ணாசை பிடித்த ஆங்கிலேயர்களிடம் இருந்தும் தன் நாட்டையும் வளங்களையும் குடிமக்களையும் பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் சேர்ந்து கொண்டது.
Sunday, July 19, 2015
மிதக்கும் தீவுகள் ....!
உகாண்டாவில் இருந்து தொடங்கும் நைல்நதியின் தாயான விக்டோரியா ஏரியில் சிறிதும் பெரிதுமாக பல தீவுகள் உள்ளன.
சிறிய தீவுகள் மீனவர்களுக்கு மாற்றுத் தங்குமிடமாகவும் மரங்களை வெட்டி எரித்து கரியாக்கி காசாக்கும் கயவர்களுக்கு சொர்கபுரியாகவும் இருக்கிறது. பெரிய தீவுகளில் விவசாயம் செய்து மக்களும் வசிக்கின்றனர்.
நீர் எல்கையில் இருக்கும் தீவுகளுக்கு இரண்டு பக்கத்து நாடுகள் உரிமம் கொண்டாடி சச்சரவுகளும் அவ்வப்போது அரங்கேறும்.
Wednesday, April 1, 2015
உகாண்டா
உகாண்டா
இந்த நூற்றாண்டின் முக்கிய சர்வாதிகாரி
இடி அமீனை ஈன்றவள்....
அரேபிய பாலைவனம் படராமல் இருக்க
அரணாக இருக்கும்
நைல் நதியின் நதிமூலம் நிறைந்த நீர் வளத்தின் ஊற்று...
மா பலா வாழை என்ற முக்கனிகளும் வற்றாமல்
வருடம் முழுக்க தந்திடும் தாயகம்...
கடல் இல்லாவிட்டாலும்
கடல்போல் பரந்த விக்டோரியா ஏரியை தலையில் ஏந்தி நிற்கும் தடாகத் தாய் .....
இந்த நூற்றாண்டின் முக்கிய சர்வாதிகாரி
இடி அமீனை ஈன்றவள்....
அரேபிய பாலைவனம் படராமல் இருக்க
அரணாக இருக்கும்
நைல் நதியின் நதிமூலம் நிறைந்த நீர் வளத்தின் ஊற்று...
மா பலா வாழை என்ற முக்கனிகளும் வற்றாமல்
வருடம் முழுக்க தந்திடும் தாயகம்...
கடல் இல்லாவிட்டாலும்
கடல்போல் பரந்த விக்டோரியா ஏரியை தலையில் ஏந்தி நிற்கும் தடாகத் தாய் .....
Subscribe to:
Posts (Atom)






