Monday, November 12, 2012

கருத்து வேற்றுமையை அங்கு வந்து கொட்டுகிறார்கள்.



பேஸ் புக்கில் சில முஸ்லீம்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாக எழுதுவதோடு தங்களது கருத்து வேற்றுமையை அங்கு வந்து கொட்டுகிறார்கள். படமோ அதிகம் . இஸ்லாத்தின் உள்ள சிறப்புகளை சொல்வதில் சிறப்பு .சிந்தனை நமக்கும் நல்வழி காட்டுவதோடு மற்றவருக்கும் பயன்படத்தக்கதாக இருக்க வேண்டும்.  கடையில் உயர்ந்த, நிறைவாக சரக்கு இருப்பினும் சரியான முறையில் விற்பனை செய்யும் திறன் அற்றோர் இருப்பின் சரக்கு  விற்பனை ஆகாது தங்கி விடும்.

 இஸ்லாம் உயர்வானது என்று சொல்லும் நாம் அதனை முதலில் முறையாக தொடந்து செயல் படுத்துகிறோமா என்ற சுய சிந்தனை தன்னாய்வு வேண்டும் . வார்த்தைகள் விளையாடி பயன்தரா. செயல்பாடு சிறப்பு தரும் . அன்பு வழி நாடி செயலில் ஈடுபட முயல்வதே உயர்வு.

  வார்படம்கொண்டு  அச்சடிக்கும் வகையாக இல்லாமல் சொல்வதை சிறப்பாக மனதை தடவி விடுவதுபோல் ஒரு ஔடதமாக அமைய வேண்டும் .கவர்ச்சி வேண்டாம் கனிவு வேண்டும். சுவனம் மற்றும் நரகத்தையே பேசி இறைவன் தந்த இனிய கருத்துகள் எடுத்தாளப் படாமல் விடுபட்டுப் போகின்றன.

No comments: