Saturday, March 12, 2011

சுனாமி படங்கள் ! ஜப்பான் நல்ல நிலை அடைய நாம் பிரார்த்திப்போம்.-

  ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையினால் மக்கள் படும் அவதிகள் உலக மக்கள் அனைவர்க்கும் மிகவும் வேதனை தந்துள்ளது . அவர்களுக்காக  நமது ஆதரவு தருவதுடன் பிரார்த்தனையும் செய்வோம் .
இப்படியும் நடக்குமா! இதற்கு மாற்று வழி என்ன? சிந்தனை செய்வோம் ! போரிட்டு  அழியும் மக்கள் (நாடுகள்) நல்ல  வழிக்கு திரும்பி வர வேண்டுவோம்.  இறைவன் நமக்கு அவ்வப்பொழுது  நமக்கு இப்படி பாடம் புகட்டியும் நாம் மாறாமல் மற்றவர் வாழ்வில் விளையாடி அழிவினை உண்டாகுவது ஏன் ?
  உலக யுத்தத்தில் அழிந்த ஜப்பானியர்கள் மிகவும் பலர் .அதன் பிறகு நல்ல நோக்குடன் வெகு வேகமாக முன்னேற்றம் அடைந்தது .பின்பு தன் கொள்கைதனை மாற்றி மக்களுக்கு சேவை செய்யும் கொள்கையுடன் பல நாடுகளுக்கு உதவி செய்வதில் முன் நிற்கின்றது . எந்த நாட்டுடனும் போரில் சேராமல் இருந்து உலக மக்கள் மனதில் நல்ல மதிப்பினை பெற்று வருகின்றது. சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படும் ஜப்பான் 6,800 தீவுகளைக் .கொண்டது. கல்வியில் 100% முழமையான முன்னேற்றம் உடையது. அது திரும்பவும் நல்ல நிலை அடைய நாம் பிரார்த்திப்போம் .
 படங்கள் by mail from ஹாஜா மொஹைதீன்

No comments: