Tuesday, March 1, 2011

“இவரே நல்லாசிரியர்” – 1


இவரே நல்லாசிரியர்!
காரைக்கால் இக்ரா நர்ஸரி & பிரைமரி பள்ளியில் 26 – 02 – 2011 அன்று நடைபெற்ற “இவரே நல்லாசிரியர்” என்ற ஆசிரியர் பயிற்சி வகுப்பு குறித்து அதில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் கருத்துக்கள்:
இந்த பயிற்சி வகுப்பு எனக்கு முதலில் பிள்ளைகளை அடிக்கக் கூடாது என்பதை தெளிவாக புரிய வைத்தது. பிறகு குழந்தைகளை புரிந்து கொண்டு அவர்களிடம் இருக்கும் திறமைகளை எவ்வாறு வெளிக் கொணர்வது என்பதையும் தெரிந்து கொண்டோம். – ஆசிரியை D.Akila
இந்த பயிற்சி வகுப்பின் மூலம், எவ்வாறு குழந்தைகளின் திறமையை பிரித்தறிந்து அதற்கேற்ப ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அன்பின் மூலம் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டேன். – ஆசிரியை K. Kalpana

 --------------------------------------------------------------------------------------------
SA மன்சூர் அலி M.A., B.Ed.,
எஸ்.ஏ.மன்சூர் அலி. நீடூர் (மயிலாடுதுறை)சேர்ந்தவர். கவுன்சிலிங் படித்தவர் .கடந்த பத்து வருஷமாக இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு, மனித வள மேம்பாடு பற்றி ஆலோசனை,கருத்து பரிமாற்றம்  செய்கின்றார்.இது மூலமாக நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்றுவருகின்றார்கள் ."

Please visit his sites:
http://meemacademy.com/
http://www.meemeducation.com/ 
http://counselormansoor.blogspot.com/
மன்சூர் பற்றி அன்வர் சதாத்

சமூகத்தில் நீங்களும் நானும் அங்கமே.
இறைவன் எங்களுக்கு கொடுத்த பெரும் கொடை.அண்ணன் மன்சூர்.
அவர்களை நாங்கள் ஒருபோதும் இழக்க மாட்டோம்.

...வழக்குரைஞர் அலி அண்ணன் அவர்களே,
மன்சூர் அண்ணன் அவர்கள் சென்னை கிரசென்ட் பள்ளியில் சேரும் போது நடந்த நிகழ்வு குறித்து,
மயிலாடுத்துறையின் அடையாளம் மறைந்த மதிப்பிற்குரிய அல்ஹாஜ் செய்து அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.
கிரசென்ட் பள்ளி யில் சேரும்போது நேர்காணல் நிகழ்ச்சியில் இவரின் ஊர் நிடூர் என தெரிந்ததும் வழக்குரைஞர் செய்து வை தெரியுமா என கேட்டார்களாம்.
அதற்கு இவர் ஆமாம் தெரியும் எங்கள் தெருவுதான் என்று கூறினாராம்.
பிறகு ஒரு நிகழ்ச்சியில் வழக்குரைஞர் செய்து அவர்கள் கிரசென்ட் பள்ளி சென்றபோது அங்கே அதன் முக்கியஸ்தர் கேட்டாராம்.
உங்கள் ஊர் காரர் மன்சூர் இங்குதான் வேலை செய்கிறார் உங்களுக்கு தெர்யுமா என.
வழக்குரைஞர் செய்து அவர்கள் அவர் என் மருமகன்தான் அவர் ஆனால் எங்கேயும் பரிந்துரைகளை அவர் விரும்புவது இல்லைஎன்று பதில் கூறினார்களாம்.
இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் அண்ணன் மன்சூர் அவர்கள்.
அவர்களை உங்களின் உறவினராக பெற்றது பெரும் பாக்கியம்.
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

மன்சூர் பற்றி டாக்டர் ஹிமானா சையத்
பல அதீத திறமை சாலிகளை சரியாக உபயோகிக்காமல் நம் சமுதாயம் வீணடித்திருக்கிறது.

அந்த வகையில் இப்போதும் கூட பலர் திறமையிருந்தும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டிய பரிதாபச் சூழல்.

இன்று நம்மிடையே இருக்கும் மிகச் சில கல்வி- சமய - நலவாழ்வியல் பயிற்சியாளர்களில் சகோதரர் மன்சூர் தலைசிறந்தவர்.

அவரை சமுதாயம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயம்.

- டாக்டர் ஹிமானா சையத்

No comments: