Showing posts with label ஹஜ் பெருநாள். Show all posts
Showing posts with label ஹஜ் பெருநாள். Show all posts

Monday, October 14, 2013

ஹஜ் பெருநாள்

நரபலி மறுத்து மனிதத்தைக் காத்தத் திருநாள்தான் ஹஜ் பெருநாள்

பெற்ற பிள்ளையையே கனவில் வந்து கேட்டதாகக் கூறி இறைவனுக்குத் தியாகம் செய்ய முற்படுகிறார் பக்தர்

ஆனால் கூர் வாளும் வெட்ட மறுக்கிறது.

சாத்தான் கூட தடுக்கிறான்.

பின் பலியிட ஆடு போதும் என்று இறைக் கட்டளை வந்ததாக காட்சி மாறுகிறது.

கருணை நிறைகிறது.

மனித உயிரைப் பலியிடுவது தியாகம் அல்ல என்று மறுத்த இறைவனின் கட்டளை வந்த நாளைத்தான் தியாகத் திருநாள் என்று அழைக்கிறார்கள் சிலர்.
நன்றி  http://anbudanbuhari.blogspot.in/