Showing posts with label வேட்கை. Show all posts
Showing posts with label வேட்கை. Show all posts

Saturday, May 16, 2015

கவிதை: வேட்கை / தாஜ்

கண்களுக்குப் புலப்படாத
வெற்றிக் கம்பம்
எல்லோரையும் ஈர்க்கிறது
பலரும் கூடங்கூட்டமாய் ஓடினார்கள்
ஒருவரை ஒருவர் முந்த
இடித்து தள்ளியப் படிக்கு
ஆவேசம் கொண்டு ஓடினார்கள்
நானும் ஓட ஆரம்பித்தேன்.

சிராய்ப்பு கொண்டவர்களின்
இரத்தக்கறை
வழிநெடுக இரைந்து கிடக்க
முதிர்ந்து களைத்தவர்களும்
கால் ஒடிந்தவர்களும்
பாதையோரங்களில்
ஒதுங்கிக் கிடந்தார்கள்.