Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Sunday, June 9, 2013

"வரம்பு”

வாழ்வியல் வயலின்  வரப்பு

.....வகுத்திடும் கொள்கை வரம்பு

தாழ்விலா வாழ்வை நிரப்பும்

.....தகுதியின் வரம்பே நிலைக்கும்

ஏழ்மையை வறுமைக் கோட்டின்

... எல்லையாய்ச்  சொல்லும் நாட்டில்

ஏழ்மையின் வரம்பும் நீங்கா

....இழிநிலை என்றும் காண்பாய்!



அளவினை மீறும் வரம்பே

...அசைத்திடும் நாக்கின் நரம்பால்

பிளந்திடும் பகையும் திறக்கும்

....பிறர்மனப் புண்ணில் சிரிக்கும்

அளவிலா வரம்பு கடந்தால்

..அக்கறைக் கூட இடர்தான்

களவிலாக் கற்பைப் பேண

...காதலில் வரம்பைக் காண்பாய்!