உகாண்டாவில் உழைப்பு; உள்ளூரில் சேவை!- முகமது கபூரின் மனிதநேயம்
பிறப்பால் இஸ்லாமியரான முகமது கபூர் சமீபத்தில், ஆதரவின்றியும், அடக்கம் செய்யக்கூட வழியின்றியும் இறந்த இந்துக்கள் மூவரின் உடலை எடுத்து அடக்கம் செய்திருக்கிறார்.
நாகர்கோவில் இடலாக்குடியைச் சேர்ந்த முகமது கபூர், உகாண்டாவில் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறார். அங்கு இருக்கும் கடையை இவரது பணியாளர்கள் கவனித்துக்கொள்ள, அதன் வருமானத்தில் பெரும்பகுதியை இங்கே சேவைக்காகச் செலவு செய்கிறார் முகமது கபூர்.
