முழுமை எதில் உள்ளது ! முடிவின் இருதியே முழுமையின் துவக்கம். குறை இல்லாத மனிதனைப் பார்க்க முடியுமா ! .குறையிலும் நிறையினைக் காண்பவனே சிறந்தவன் . முழுமையாக கிடைக்கவில்லையயே என ஆதங்கப்படுவதைவிட கிடைத்ததைக் கொண்டு நிறைவு அடைந்தவன் வாழ்வே மகிழ்வாக அமையக் கூடும் . தாகம் தீர்க்க நீர் நாடி வேண்டுவோர் கிடைத்த நீரைக் கொண்டு தாகத்தினை தீர வழி உண்டாகிக் கொள்வார்கள் . அதன் வேகம் படிப் படியாக குறைவதனை உணர்வார்கள் . எது தேவைக்கு அதிகம் கிடைத்தாலும் அதன் மதிப்பு குறைவதனைக் காணலாம் . கடைத்தெருவில் பொருட்கள் அதிகம் வந்து சேர்ந்தாலும் ஒரு பொருளின் விளைச்சல் அதிகமாகிவிட்டாலும் அதன் மதிப்பு குறைவாக போய்விடும் நிலை என்பது உண்மை . வாழ்வின் தத்துவமும் இதில் அடங்கும் . நாம் நினைத்தது முழுமையாக கிடைக்காது அப்படியே அது கிடைத்து விட்டாலும் அதன் சுவையை ,மகிழ்வை நாம் அனுபவிக்க முடியாது . குறையும் நிறையும் உள்ளடக்கியதே வாழ்வின் மகத்துவம் .திருமண வாழ்வும் அதைச் சார்ந்ததுதான் . நம்மால் முடிந்தவரை வாழ்வை மகிழ்வாக்கிக் கொள்ள விட்டுக் கொடுக்கும் மனதுடன் நல்லதை பாராட்டி கெட்டதை மறந்து சிறப்போடு வாழ முயல வேண்டும் . கணவனும் மனைவியும் முழுமையாக பிடித்தவர்காக ஒருபோதும் சிறப்பாக வாழ்வை அமைந்துவிட முடியாது. கிடைத்த வாழ்வை சிறப்பாகிக் கொள்ள முயல்வதே சிறந்த வாழ்வு . வாழ்க்கை என்பது பொருள் கொடுத்து வாங்கும் பொருளல்ல.அது மனதைச் சார்ந்தது.வாழும் முறையைப் பொருத்தது.
இறை நம்பிக்கைக் கொண்டு அவனைத் தொழுது வாழ்வோர் வாழ்க்கை மனதில் கசடை நீக்கி தெளிந்த நீரோடையாக வாழ்வின் ஓட்டமும் சிறப்பாக முடியும்
