Showing posts with label ப்ரண்ட். Show all posts
Showing posts with label ப்ரண்ட். Show all posts

Thursday, February 27, 2014

அன்பு தாங்க வாழ்க்கை அதை எப்பதான் புரிஞ்சுப்பாங்களோ!

இன்றைக்கு காலைல ஆபிஸ் போனேன், நான் என்னோட சைக்கிள் நிறுத்துற இடத்துல ஒரு மகனும் அவருடைய தாயாரும் பேசிட்டு இருந்தாங்க! நான் கொஞ்சம் நகருங்கன்னு சொல்லிட்டு என் சைக்கிளை நிறுத்திக்கொண்டிருக்கும் பொது , நான் விரும்பாமலேயே அவர்களின் உரையாடல் என் செவியை தீண்டியது.

அந்த அம்மா சொன்னாங்க, நான் உன் ப்ரண்ட், என் கிட்ட எதையும் மறைக்காதடா தம்பி

அதுக்கு அந்த மகன், இல்லேம்மா பேஸ்புக்ல தான் அந்த பொண்ணு பழக்கம் மூனு மாசம் தான், மூனு முறை தான் பாத்திருக்கேன்னு!

நீ என்னடா இப்படி சொல்ற, அந்த பொண்ணோட அப்பா வந்து மிரட்டுறாங்க, பொண்ணு முழுகாம இருக்காளாமே!

வந்து இல்லம்மா, நான் டேப்ளட் வாங்கித்தரட்டுமான்னு கேட்டேன், அப்பவெல்லாம் இல்ல சரியாயிடுச்சுன்னு தான் சொன்னா,

இதையெல்லாம் விரும்பாமத்தான் கேட்டியான்னு கேட்குறீங்களா?........இல்லைங்க இயல்பாவே என்னால ரொம்ப மெதுவாதான் நடக்க முடியும். அதனால கிசுகிசு ப்பா அவங்க பேசினாலும் அது என் மனசை பிழிய ஆரம்பிடுச்சுடுச்சு, இதுக்கு பேர் காதலான்னு யோசிட்டு நான் நடக்கும் போதே அந்த மகன் ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க! என்கிட்ட படுத்த மாதிரி எத்தனை பேருக்கிட்ட படுத்தாளோ!

அந்த பொரம்போக்கை நிஜமாவே அந்த பொண்ணு நேசிச்சிருந்தா பாவம் அவளும் அவ குழந்தையும்! சும்மா பொறுக்கி பண்ணாடையா இருந்தா என்ன கண்ராவி கலாச்சாரம் டா சாமி!

யோசிட்டு போய் ஆபிஸ்ல உட்கார்ந்ததுல கொஞ்ச நேரம் வேலை பார்க்க முடியல,