Showing posts with label போர். Show all posts
Showing posts with label போர். Show all posts

Wednesday, July 23, 2014

போர் வெறுப்போம்

காட்டுமிராண்டித் தனம்
அநாகரிகத்தின் உச்சம்
மனிதன்
பரிணாம வளர்ச்சியே
பெறவில்லை
என்ற அறிவிப்பு
போர்

*

கண்காணாத தேசத்தில் விளைந்த
ஆப்பிள்
என் ரத்தமாகிறது

என் காலடி மண்ணில் விளைந்த
நெல்
எங்கோ ஒரு தூர தேசத்தவனுக்கு
ரத்தமாகிறது

இதில் என் மண் என்பது எது

Wednesday, December 26, 2012

விரோதிகளை நான் வீழ்த்துவதில்லை !

விரோதிகளை நான் வீழ்த்துவதில்லை!
விரோதிகளை நான் என் வலையில் விழவைக்கிறேன்.

போர் தொடுத்தேன் அவனை வீழ்த்த
இதயப் போர் இருந்து கொண்டே இருக்க  
போர் தொடரும் போரானது
போரின்  வெற்றி இருவருக்குமானது
போரில் அவனை வீழ்த்தினால்
வெற்றி என்னை தனிமைப் படுத்தி வீழ்த்தி இருக்கும்

தனிமையை  விரும்ப நான் வேதாந்தியல்ல
தனிமையில் உலவும்  மிருகமுமல்ல

தனி மரம் தோப்பாகாது
தனி மனிதன் சமூகமாட்டான்

தனிமையில்  இருப்பவன் மனச் சிறையில் விடப்பட்டான்
தனித்து பசித்து விழித்து இருந்தாலும் வீழ்வது உறுதி
வீழ்ந்த உடலை அகற்ற சமூகம் வருவதும் உறுதி
நானே சமூகத்தை உருவாக்குகின்றேன் எனக்காக
வாழ்க்கைத் துணை தேடி வாரிசு வளரட்டும்
வாழ்க்கையில்  தனிமை வாழ்க்கை வேண்டாம்

Friday, December 23, 2011

சில ஆண்களின் ஆசை இரண்டாம் திருமணம்!

ஆண்களின் நடக்காத ஆசை இரண்டாம் திருமணம்!
போர் நடந்த நாடுகளில்  போரின் விளைவினால்  பல ஆண்கள் இறந்து விடுவதனைப் பற்றி  நாம் அறிவோம் . இது ஈரான்  வியட்நாம் நாடுகளில் நடந்தபோது ஆண்கள் போரில் மாண்டுபோய் பெண்கள் மிகைத்து இருந்த கொடுமை அதிகம் . போர்களில் அதிகமாக கொல்லப்படுகிராகள். 

கணவனை இழந்த பெண்களே அதிகம்.  பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது. அந்த நிலையில்  பெண்களுக்கு திருமணம் செய்துக் கொள்ள மண முடிக்காத ஆண்கள் கிடைக்காத நிலை. குறிப்பாக  வியட்நாமில் பெண்கள் தவறான பாதையை மேற்கொள்ள வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.ஈரான் போர் முடிந்த நிலையில் அந்த நாட்டின் முக்கியமானவர்  இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ள அனுமதி கொடுத்து அந்த  மனைவியருக்குள்  நியாயமாக நடந்து கொள்ளுங்கள் ஆனால் அது இஸ்லாம் அனுமதி தந்த முறைப்படி இருக்க வேண்டும் என  அறிவித்தார்.