நெய்விளக்கு ஏற்றவோ
நெஞ்சிருண்ட வேளையில்...
பொய்விலக்கி வாழவே
புனிதப் பாதைத் தேடினேன்
மெய்விலக்கம் கண்டபின்
மீண்டும் மீண்டும் பேதைநான்...
செய்வதென்ன பாவமா...?
செய்வதென் சுபாவமா...?
திரியிழந்த தீபமாய்
திரிந்துளைந்த என்னை நீ
நெறியிலே அமர்த்தினாய்
நினைவுகள் திருத்தினாய்
பொறியில் சிக்க வேகமாய்
போகும் பாவ ஜீவனாய்
அறிவிலாது போகிறேன்
ஆண்டவா நீ காத்தருள்...
சோதியில் நிறுத்தினாய்
சூன்யமாய் வழுக்கினேன்
நீதியால் நிமிர்த்தினாய்-அ
-நீதியில் தடுக்கினேன்
தூதினால் துலக்கினாய்
தூயதை விலக்கினேன்
ஆதியாதி ரட்சகா...
அடிமையென்னை ஏற்றருள்...
