எனது "நிழலில் படரும் இருள்" கவிதை நூலில் வெளியான "காடிழந்த யானைகளின் துயரம்" கவிதை தமிழின் சிறந்த கவிதைகளில் ஒன்றாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அக்டோபர் 18-ம் தேதி நுலாக வெளியிடப்படுவதாக நண்பர் அகன் தெரிவித்தார்.
முழு விபரங்கள் தெரிந்தபிறகு மீண்டும் பதிவேன்..!
காடிழந்த யானைகளின் துயரம் -
நிஷாமன்சூர்
மாபெரும் துயரத்துடன்
நகரம் நோக்கி
வருகின்றன யானைகள்
விரும்பி வருவதில்லை அவை
துரத்தியடிக்கப் படுகின்றன
பசியின் நிர்ப்பந்தத்தால்
அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை
