Showing posts with label நாசர். Show all posts
Showing posts with label நாசர். Show all posts

Friday, July 29, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 3


* அமீரகத்திலிருந்து எனது நண்பர்களில் சிலர் தாயகத்திற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். அப்படி வந்தவர்களில் இலக்கிய நண்பர் ராஜகிரியைச் சேர்ந்த அண்ணன் அப்துல்கதீம் அவர்கள்.

அமீரகக் கவிஞர் பேரவையை பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பின் உதவி தலைவரும் இல்மு அமைப்பின் தலைவருமாவார்கள்.

இவர் தற்போழுது தஞ்சையில் வசித்து வருகிறார்கள் நான் தாயகம் வந்ததும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.. அவசியம் தஞ்சைக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டார்கள்… திருச்சி செல்லும் வழியில் உங்களை சந்திக்கிறேன் என்றேன்… அவர்களும் ஆர்வத்துடன் இருக்க திருச்சி செல்ல நான் திட்டமிட்டிருந்த நேரம் மாறிப்போனதால் போகும் வழியில் கதீம் அண்ணனை சந்திக்க முடியவில்லை என்று அவர்களிடம் தொலைபேசியில் கூறிக் கொண்டேன்..

திருச்சியிலிருந்து திரும்ப வரும்போது அவசியம் வாருங்கள் என்றார் சரி என்று கூறினேன தவிர வரும்போதும் சந்திக்க முடியவில்லை… வாய்பிருந்தால் இன்னொருமுறை சந்திக்கலாம் என்றேன் அதற்கு அவகாசம் இல்லை அண்ணன் ஸ்டேட் புறப்பட்டு விட்டார்கள் எப்படியும் திரும்ப வரும்போது துபாயில சந்திக்கலாம்… ஒருவரை சந்திக்க வேண்டும் என்பதில் இந்தியாவைவிட துபாய் சிறந்தது எப்படியும் சந்தித்துவிடுலாம்…!

சந்திக்க முடியாமல் போனதிற்கு காரணம் கீழே படிக்கும்போது விளங்கிக் கொள்வீர்கள்…

* எனது துணைவியார் மற்றும் குழந்தைகள் துபாயிலிருந்து இரவு 11 மணிக்கு மிஹின்லங்கா விமானத்தில் புறப்படுவதற்கு துபாய் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். அவர்களுடன் எனது துணைவியாரின் தோழி குடும்பமும் மற்றும் எனது மைத்துனரும் படைசூழ சென்றுள்ளார்கள்.

இரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 5.00 மணிக்கு தான் புறப்படும் என்று கூற ஆர்வத்துடன் வந்த என் துணைவியார் டென்சன் ஆகிவிட்டார். இந்த மாதிரியான விமானத்தில் ஏன் டிக்கேட் போடுறீங்க என்று கோபப்பட்டுக் கொண்டார்.