Showing posts with label திண்டுக்கல் தனபாலன். Show all posts
Showing posts with label திண்டுக்கல் தனபாலன். Show all posts

Tuesday, April 16, 2013

பிரபலங்கள் வரிசையில் திண்டுக்கல் தனபாலன்


'தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும்.

எனது சொல்லாலும் செயலாலும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக நான் எடுத்துக் கொண்ட வழி - தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும். கைபேசி எண் : +91 9944345233 dindiguldhanabalan@yahoo.com

Occupation
ISO 9000 Consultant & Business- ' - திண்டுக்கல் தனபாலன் 
-----------------------------------------------------------------

வலைத்தளம் வலைப்பூ நடத்துவோர், படித்து அறிவைப் பெறுவோர் பேரன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன்  அவர்களை அறியாதோர் யாருமில்லை.
அவர் நடத்தும் வலைப்பூ அவர் ஊரோடு அவர் பெயரையும் இணைத்து இருக்கிறது .
திண்டுக்கல்  ஹல்வாவைப்  போன்று  மிகவும் ருசிதான் .
'திண்டுக்கல் தனபாலன்' இதுதான் அவரது வலைப்பூ திண்டுக்கல் தனபாலன்
பல உண்மையான கருத்துக்கள்..,சிறப்பான தொகுப்புகள் .பலருக்கும் உதவும் என்பதால் பகிர்கிறார் ஆனால் ஒன்றையும் தூக்கிச் செல்லாதவாறு பாதுகாப்பாய் வைத்துள்ளார் காப்பி குடிக்க தருவார் காப்பி மற்றும் பேஸ்ட் பண்ண முடியாது .
இறைவன் அவருக்கு கொடுத்த அறிவை மக்களுக்கு வழங்குகின்றார். 'உங்களில் உயர்ந்தோர் தாம் பெற்ற அறிவை மற்றவருக்கு கற்பிப்பவர் ஆவார்' என்பது நபிமொழி
  'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
 ஸஹீஹ் புகாரி ஹதீஸ்-13
 உங்களில் உயர்ந்தவர் யார் என கேட்கும் போது 'பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றிவைத்தவர் உங்களில் உயர்ந்தவர்' என நபிகள் நாயகம் நவின்றார்கள்.
 புகழுக்காகவும் ,பொருள் நாடியும் எழுதுவோர் இருந்தும் மக்கள் பயனடையவேண்டும் என்று எழுதி வைத்தவர்கள் நம் முன்னோர்கள் .அது மட்டுமல்ல அறிவை பகிர்ந்துக் கொள்ள முடியாமல் ஆன்றோர்களால் இருக்க முடியாது.அறிவு உங்களுடன் அடைந்துக் கிடக்கும்போது ஒரு பயனுமில்லை. அது வெளியே வந்துவிட்டால் பொதுவுடமையாகி விடுகின்றது