நமது தமிழகத்தின் தனிப்பெரும் முதல் அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் அவர்கள், முஸ்லிம் சமுதாயம்
பற்றி எழுதும்போதும், பேசும்போதும் குறிப்பாக, முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றும்போதெல்லாம் அவர் நினைவு கூர்ந்து உச்சரிக்கக் கூடிய பெயர்களில் ஒன்று தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியர் தாவூத் ஷாவும் ஆகும்.
நான் சிறுவனாக பள்ளியில் படிக்கும் மாணவனாக இருந்த பருவத்திலே எனக்கு சமுதாய சீர்திருத்ததக் கருத்துக்களை - சிந்தனைகளை உண்டாக்கியவை தந்தை பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையும், பெரியவர் தாவூத் ஷா நடத்திய தாருல் இஸ்லாம் பத்திரிகையுமே ஆகும்.”
-என்றெல்லாம் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களால் சிறப்பிக்கப்பட்ட தாவூத் ஷாவின் பிறந்த நாள் விழா இன்று (மார்ச் 29) இலக்கிய ஆர்வலர்களால் கொண்டாடப் படுகிறது.
