திரு.S. முனிர் ஹோதா IAS
தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு தலை சிறந்த நிர்வாகி இவர்.குமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இவர் பதவி வகித்த போது மாவட்ட நிர்வாகத் திறனில் இவர் காட்டிய அக்கறை குமரி மாவட்ட மக்களால் இன்றளவும் நினைவு கூறப்படுகிறது.
தமிழக ஆட்சி அமைப்புகள் மத்திய அரசால் கலைக்கப்படும் போதெல்லாம கவர்னரின் ஆலோசகர்களுக்கே ஆலோசனை வழங்கும் இடத்தில் இவரையே மத்திய அரசு தேர்ந்தெ டுத்து நியமனம் செய்திருக்கிறது. ஒரு முதல மைச்சர் நிர்வகிக்க வேண்டிய அனைத்து துறைகளையுமே, மிகவும் லாகவமாக கை யாண்டு துரிதமாக முடிவெடுக்கும் இவர் திறன் கண்டு அரசு நிர்வாகமே வியந்ததுண்டு
மாநில நிர்வாகத்தில் இவர் வகிக்காத பதவி களே இல்லை எனலாம். பதவியால் சிலர் பெருமை அடைகின்றனர். ஆனால் இவரால் பதவிகள் பெருமை பெற்று இருக்கின்றன.
