Showing posts with label சொல்வனம். Show all posts
Showing posts with label சொல்வனம். Show all posts

Wednesday, October 9, 2013

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி


 மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்

நீவியழித்திடவியலா
நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்
நீயொரு மண்பொம்மை

உனது கண் பூச்சி
செவி நத்தை
கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்
உன்னிடமும் வேம்பிடமும்
இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன

திசைகளின் காற்று
விருட்சத்துக்குள் சுழல்கிறது