Showing posts with label சிறந்த வழிகாட்டி. Show all posts
Showing posts with label சிறந்த வழிகாட்டி. Show all posts

Tuesday, November 1, 2011

நமக்கு ஏன் அது மிகவும் முக்கியமாக வேண்டும் !


 நமக்கு நடக்கு
ம் கெட்ட விஷயங்களை  பற்றிய எண்ணத்தினை ஒரு நல்ல எண்ணம் தான் முறியடிக்க வேண்டும்
கெட்ட விஷயங்கள்  நமக்கு மட்டும் ஏன் நடக்குது! என்ற எண்ணம் தான் நம்மை நாமே அழித்துக் கொள்ளும் ஆயூதம், இது ஒரு தாழ்வு மனப் பான்மையின் திறவுகோல்.
இந்த வாழ்க்கை பல ஏற்றத்தாழ்வுகளுக்கு, பல சோதனைளுக்கு உள்ளானது. விரக்தி மனப்பான்மை வாழ்வினை அழித்துவிடும் . துயரம் ஏற்படும் நிகழ்வு நடந்தால் அதுவும் ஒரு நன்மையாகவே இருக்கும். இறைவன் நாட்டம் அதுவாக  இருப்பின் நாம் என்ன செய்ய முடியும்! என்ற மன ஆறுதல் அடையக் கூடிய உள்ளம் நமக்கு தேவை.  இறைவன் (அல்லாஹ்) நம்மை  இதைவிட மோசமான பாதிப்பிலிருந்து காப்பாற்றியுள்ளான்  என்ற நினைவுடன் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.