Showing posts with label கவர்ச்சி. Show all posts
Showing posts with label கவர்ச்சி. Show all posts

Friday, January 4, 2013

எதுவும் தலைநகரில் நடந்தால் தான் தலையில் ஏறுமோ!

எதுவும் தலைநகரில் நடந்தால் தான் தலையில் ஏறுமோ!
இப்பொழுதாவது தலையில் ஏறியதே!

நமது கடமை தவறை தடுப்பது
குஜராத் குல்பர்க்கா சொசைட்டி முஸ்லிம் பெண்கள் பனிரெண்டு பேர் நிர்வாணமாக்கப் பட்டு கேவலப் படுத்தப் பட்டனர்.
வயிற்றை கிழித்து குழந்தையை கொன்று தாயையும் கொன்ற கொடுமை.
இதற்கு அத்தனை முக்கியப் படுத்தி செயல்பட நிதானம்
அதனை மறந்த நிலை.

நன்மையான செயல் செய்ய தாமதமும் வேண்டாம்
தீமையான செயலை தடுக்க தாமதமும் வேண்டாம்

பெண்ணியம் பேசும் மாந்தர் பெண்களுக்கு உரிமை கேட்டனர்
பெண்ணியம் பேசும் சில மாந்தர் பெண்களுக்கு கவரும் ஆடை உடுத்துவதிலும் உரிமை கேட்டனர்
பெண்ணியம் பேசும் மாந்தர் பெண்கள் இப்பொழுது ஆடை உடுத்துவதில் முறை வேண்டும்மென்று விரும்புகின்றனர்

ஒரு குழந்தை பிறந்த பின் அதனை பாதுகாக்க தாய் படும் சிரமங்களை நினைத்துப் பாருங்கள்
நம்மைப் பெற்றவரும் ஒரு தாய்தான் அவளும் பெண்தான் தாய் என்ற சொல்லுக்கு மதம் என்ற பொருளில்லை மதமில்லை. அவளையும் மத வேறுபாடு கற்பிக்கும் கொடுமை .மனித நேயத்தை தாயோடு புதைக்க முயலும் பேதமை அழியட்டும் .