Showing posts with label கல்வெட்டுக்கள். Show all posts
Showing posts with label கல்வெட்டுக்கள். Show all posts

Wednesday, October 9, 2013

ராவுத்தர் : ஒரு பார்வை

தமிழ் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் ராவுத்தர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்து கலாச்சாரத்தை ஒட்டியே ராவுத்தர்கள் கலாச்சாரம் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்து-முஸ்லிம்களின் சமய ஒற்றுமை காணப்படுகிறது.

ராவுத்தர் என்பதற்கான ஆவணம் (கல்வெட்டுக்கள்) :


திருப்பெருந்துறை சிவன்கோவில் மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரன் சிலை உள்ளது. அச்சிலை 'குதிரை ராவுத்தர்' என்றும், அம்மண்டபம் 'குதிரை ராவுத்தர் மண்டபம்' என்றும் அழைக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள திரௌபதியம்மன் கோவில் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல் வீரன் சிலை உள்ளது. அச்சிலைக்கு 'முத்தியாலு ராவுத்தர்' என்று பெயர் வைத்துள்ளனர். இன்றளவும் அப்பகுதியில் வாழும் இந்துக்கள் முத்தியாலு ராவுத்தரை வழிபடுகின்றனர். மேலும் ஒரு முஸ்லிமுடைய சமாதியும் சிறியதாக அக்கோயிலினுள்; உள்ளது. (பார்க்க: களஆய்வு புகைப்படம்)