Showing posts with label இஹ்ராம். Show all posts
Showing posts with label இஹ்ராம். Show all posts

Monday, October 14, 2013

இஹ்ராம் என்றோர் இலக்கணம்

முதல் ஆலயம் நீ!
முதல்வனின் ஆலயம் நீ!
கஅபாவே - உன்னைக்காண
கண்ணுக்குள்  ஓர் ஆவல்
கனன்றுகொண்டேயிருக்கிறது.


அருள் நிரம்பிய உன்
அழைப்புக்குச் செவியேற்போர்
அதிருஷ்ட சாலிகள்
ஆன்ம தேகத்தில் திரண்ட
பாவ அழுக்குகளை
'ஜம் ஜம் நீரால் கழுவி
மூமின் என்று முத்திரை பெறுகிறார்கள்

கழுவப்பட்ட அழுக்குகளுக்கு
கதிரொளியே பகரமாகிறது!

ஹஜ்ஜுக்கடமையே....!
இறக்கிவைக்க, இறக்கி வைக்க
எல்லாச் சுமைகளையும்  நீ
ஏற்றுக்கொள்வதால் தானோ
இந்த மனிதர்கள்
உலகின் எல்லா இடங்களிலும்
பாவங்களைப் பொறுக்குகிறார்கள்?